என் கண்களுக்கு
கண்மை
இட்டுக்
கொள்கிறேன்...
என்
கண்ணுக்குள்ளிருக்கும்
உனக்கு
திருஷ்டிப்
பொட்டாக !!-
கரைந்து போனேன்
உன்னைக் கனவினில் தேடியே,
உன் கருவிழிப் புருவத்தில்
தீட்டிட்ட கண் மை
கலைந்து கரைந்ததைப் போல..,-
வெளிப்படாமலும்
இன்னும்,
எழுதப்படாமலும்...
உன் கன்னக்குழிக்குள்
வெட்கங்களாய்...
ஒர் கவிதை சிக்கிக்
கொண்டுள்ளது...💕-
விழியின் விளிம்பில் மையல்
கொண்ட.. கார்மேகத் துகள்
அவள்!! கண்மை !!-
தேங்கி கிடக்கும் கண்ணீரை
விழ விடாது காக்கும்
லட்சுமன ரேகையே
தாரகை அவள் விழிகளில்
தினம் தீட்டிடும் கண்மை..
-
மின்வெட்டு பாய்ச்ச
தயாரானவள்
என் கண்களைப்
பார்த்ததும் வந்த
புன்முறுவலால்
நான் மயங்கியது
என்னவோ உண்மைதான்
அவ்வழகுப் புன்னகையால்.-
பெண்ணே!!
கண்மையை தீட்டுகிறாயா இல்லை
எந்தன் கண்களை திருடுகிறாயா??
உன் கண்களை பார்த்ததில் இருந்து
உன்னை தவிர வேறு ஒன்றும்
தெரியவில்லை!! புரியவில்லை!!
-
உன் விழிகளின்
பார்வையில் திளைத்த
இதழின் மேல் நின்ற
வார்த்தை யாவும்
தட்டுத்தடுமாறி
தத்தளிக்கிறது
மை பூசிய மான்விழியை
கண்டவுடன்..!-