வீசும் காற்றில் அவள் வாசம்
அதிர்ந்தது மனதில் ஒரு இசையாய்
என் பெயரை அவள் திரும்ப கூறுகிறாளா
அதை காதலென நான் உணருகிறேனா-
Karthik 🌹¯\_(ツ)_/¯ᥫ᭡ 90s kid
Never getting married at this l... read more
இது உணர்வுகளின் சங்கமமா
அவள் மீண்டும் என்னை அழைக்கிறாளா
நேசத்தை மொழியால் சொல்ல முடியுமா
இதென்ன ஒரு புதிர் என்றே உணர்கிறேன்-
முழு சந்திரனாய் அவள் பிரகாசிக்கிறாள்
ஆனால் இவன் இருளில் மயங்குகிறான்
நீண்ட தூரம் ஓடி வந்த அவன், அவளின் வெட்கத்தின் பாதை தொலைகிறான்..-
முதல் உரையாடலில்
தயக்கத்துடன் பற்றி
கொண்ட அன்பு இறுதிவரை
தனது பிடியை
தளர்த்துவதில்லை...-
என்னுடைய கவிதை உலகத்துக்குள்ள தான், நான் ஆசைப்படற எல்லாமே கிடைக்குது..
-
பனித்துளி போல அவள் கை எனை தொட வேண்டும்
அந்த தொடுதலில் என் வாழ்க்கை நனைந்து விட வேண்டும்
மெல்லிசை போல அவள் வார்த்தைகள் எனை கட்டி போட வேண்டும்
அந்த மெல்லிய புன்னகை என் கண்ணில் நிறைந்திருக்க வேண்டும்-
இவளுக்கு இவன் பிடிக்காமல் போனால்
அந்த நொடியே.. இவனின் இதயம் நொறுங்கட்டும்..
மௌனத்தின் இசை இன்றே நிற்கட்டும்
துயரத்தின் ராகம் நெஞ்சில் ஒலிக்கட்டும்-
விழியோரம் துளிகள் துளிர்க்க
நெஞ்சின் ஆழம் அழகாய் கலங்க
இவளின் புன்னகை ஒரு மாயைதான்
இவனின் மனசு உதிர்ந்த மலர்தான்-
அந்த அன்பை நிலை நிறுத்திக் கொள்ள சண்டையிட்டான்.. போராடினான்..
கதறி அழுதான். தன்னை தானே காயம் செய்து கொண்டான்.. ஆனால்
ஒரு கட்டத்துக்கு மேல் மௌனம் காத்து
இப்போது அமைதியாகி விட்டான்-
தாலாட்டு நான் பாட கண்மணியே
நீ தூங்கு தாலேலோ
உன் கனவில் மலர்கள் துளிர்க்கட்டும் தாலேலோ
நெஞ்சில் குளிர் தூவும் சுகம் உனை சுற்றட்டும் தாலேலோ
வானவில் நிழல் வரை உன் கனவோடு வரட்டும் தாலேலோ
பூங்குயில் ராகம் உன் சேவி சேரும் தாலேலோ-