சிவந்த கைகளுக்கு மருதாணி மட்டும் காரணமில்லை அதில எழுதியிருக்கும் நின் பெயரும் ஓரு காரணம் தான்.
-
துகிரா நாச்சினி
454 Followers · 169 Following
Joined 12 July 2018
2 FEB 2021 AT 0:33
1 FEB 2021 AT 12:38
செய்து பழகிப்போன
ஒவ்வொரு செயலும்
செய்யும் போது
இதுதான் கடைசி
கடைசியென்று
காதோரமாய்
ரீங்காரமிடுகிறது
பிரிவு.
-
31 JAN 2021 AT 22:56
வற்றாத
வடுக்களுக்கெல்லாம்
வலிப் போக்கும்
நிவாரணம்
இசை.
துகிரா நாச்சினி
-
27 JAN 2021 AT 9:12
மனம் லயித்து சிரித்து
பேசிக்கொண்டிருக்கும் போதே
பிரிவின் சாயலை
உணர்த்தி விடுகிறது
கண்ணோரமாய்
கசியும் கண்ணீர்.
-
18 JAN 2021 AT 21:30
மார்கழி குளிர் நீ
மார்கழி மழை நான்
பருவம் மாறி வந்த காதல் மாரி நாம்.-
13 JAN 2021 AT 18:50
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மனிதர்களிடம் தான்
ஒவ்வொரு மனிதனுக்கும் விலையுண்டு
விலைக்கேற்றே மதிப்புண்டு-
13 JAN 2021 AT 11:24
கொஞ்சம் காலம் எடுக்கும்
எல்லாவற்றையும் சரி செய்ய
இல்லை இல்லை
சரி செய்து கொள்ள....
-