விடுமுறை என்பது
நாட்களுக்கு தானே..
உன்னை பற்றிய
நினைவுகளுக்கு இல்லையே..-
வெயிலின் தாக்கத்தை தணிக்க
கம்பு கூழில் வெங்காயம் மிதக்க
மிளகாய் கடித்தவன்..
இன்று, சாராயக் கிண்ணத்தில்
மூழ்கி மிதக்கும் பனிக்கட்டியில்
உறைந்து போகிறான் !!-
பார் கண்ட பன்மையில்
நான் கண்ட ஒருமை
வான் காணாத பதுமை நட்பை
நான் கண்டேனே தோழி உன்னிடம் !-
சற்று நில் நதியே..
அன்னைப் போலவே நீயும் நிற்காமல்
ஓடி உழைத்து, மகிழ்விக்கிறாயே..
நீ எப்போதும் இளைப்பாறுவாய் ?
காலம் நிற்காமல் காடு தாண்டி ஓடுகிறாய்
கிளைகள் தாழ்ந்து தடவிக் கொடுக்கும்போதா ?
நீயும் பெண் என்பதால் மரங்கள்
மலர் தூவி ஒப்பனை செய்யும்போதா ?
ஓடிய நீ நின்றெழுந்து அருவியாய்
அசுர உருவம் அடையும்போதா ?
கொஞ்சம் சொல் நதியே!!-
வானத்தில் மலர்ந்த மறையாத
வானவில்,
அந்த அழுக்கு கண்ணாடியில்
அவளுடைய அழகான முகத்தை
பார்த்ததும் தொலைந்தவன்,
பாறை கரைந்து பாழாக,
இளமை வெடித்து
இரண்டாகி கொதிக்கிறது !-
உலகின் கனவுகள் ஒன்றாகி
ஒரு விடியல் நதியில் கரைகிறது
உயிரின் கனவே உனைத் தேடி
என் ஒவ்வொரு விடியலும் அலைகிறது..!-
கலங்கள் எதிரே சிரிக்கிறது
கால்கள் புறப்பட நினைக்கிறது..
உடல் பொருள் மட்டும் உள்ளது
என் ஆன்மா அது
உன்னில் எங்கும் மிதக்குகிறது..
நாட்கள் முடிந்து அலைகிறேன்
இதயம் வெடித்து தவிக்கிறேன்..
நினைவால் இனி கூட வரும்
இதுபோல் இல்லை வேறு இடம்..-
அந்திக்கனவுகளுக்கு
விடைகொடுத்து
சாளரம் நோக்கிய கண்களிலிருந்து
தொலைந்து போனது
எனது இருவிழிப்பந்துகள்..
பார்வை பரிதவிப்புகள்
அந்தக் கண்களில் நிழலாட
உள்ளுக்குள்ளோ
கந்தகத் தாபங்கள்..
நிலவு, நீரோடையிடம்
நிதர்சனமாய் கலந்துநிற்க
நான் மட்டும் தனியே..-
உறைந்த உரையாடலை
உலர்த்த உணர்வில்லையா ??
உறைப்பனி உறங்குமுன்
உயிர் உறவா உடன்வா !!-