-
இப்பொழுதெல்லாம்
உன்னிடம் மாற்றங்களை
எதிர்பார்த்துக்
கொண்டிருப்பதில்லை நான்...
நீ தரும் வலிகளைத்
தாங்கிக் கொள்ளுமளவு
என்னை நானே
மாற்றிக்கொண்டு விட்டேன்...
அல்லது மாறிவிட்டதுபோல
நடித்துக் கொண்டிருக்கிறேன் !-
பொய் சொல்லுமுன்
கொஞ்சமாவது யோசியுங்கள்
யாரிடம் பொய் சொல்கிறோம் என்று...
சில நேரங்களில்,
உண்மைத் தன்மையை
அவர்கள் அறிந்திருக்கும் பட்சத்தில்...
நீங்கள் சொல்லும் பொய்களால்
உங்கள் நலம் நாடும் நல்ல உள்ளங்களை
நீங்கள் இழந்து விடக்கூடும்
என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்
-
போலியான முகத்திரையை இதயத்திற்கு சிறப்பாய் அணிந்து கொண்டு... நம்மை ஏமாற்றியவர்களின் முகமூடி நம்மாலே கசக்கி கிழிக்கப்படும் தருவாயில்...அவர்கள் இதயத்தில் இருந்து வழியவேண்டிய குருதி...மாறாக நம் இதயத்தில் இருந்து வருவது ஏனோ...முழுமையாய் நம்பியதற்கு தண்டனை தானோ...😩☹️🤥
-
இன்றைய அக்கறை
நாளைய அலட்சியம்..
இன்றைய நேசம்
நாளைய வெறுப்பு..
இன்றைய நம்பிக்கை
நாளைய துரோகம்..
இன்றைய விருப்பு
நாளைய சலிப்பு..
இவ்வளவு தான்
சிலரின் இன்றைய காதல்..
-
எந்தையே நீயென
எண்ணியதற்கா
ஏகாந்த
போர்வைக்குள்
ஏமாற்றத்தை
பரிசளித்தாய் ?!-
விதைத்தது என்னதான்
அன்பாக
இருந்தாலும்..
விளைவது என்னமோ
ஏமாற்றமாகத் தான்
இருக்கிறது !!-
எப்படி வேண்டுமென்றாலும்
ஏமாற்றுங்கள் எதற்காகவும்
அன்பை கையிலெடுக்க வேண்டாம்
பிறரை ஏமாற்ற !
-
விதைத்ததே விளையும் என்ற நம்பிக்கையில்
நான் இருக்க ...
விளைந்தது வேறு என்றானதால் ..
விளைந்தது ஓர் முத்து..
விழி விளிம்பில்......-
எதிர்ப்பார்ப்பை
குறைக்க குறைக்க
ஏமாற்றங்கள்
நம்மைவிட்டு
விலகியே செல்லும்!!!-