அவன்(அப்பா) தோய்ந்து போன உடைகளில் இருந்து பிறக்கின்றன ......
என் சலவை செய்த ஆடைகள்....
-
Green luver
From Malaikottai managaram...❤️
தமிழ் காதலி
Oct 13👶
🌼அழகாய் இரு எண்ணங்... read more
மூன்றாறு ஆண்டுகள் ஆனாலும் ,
முதல் நாள் பார்த்த கணம் நெஞ்சிலே நிற்கிறது....
உன் உயரம் பார்த்து வியந்து போனேன்
உள்ளம் பார்த்து ஆடி போனேன்...
இந்த ஜென்மத்திற்கு நான் உனக்கு போதும்....
அடுத்த ஜென்மத்திலும் நீ எனக்கு வேண்டும்..
😍திருமண நாள் வாழ்த்துக்கள் 😍
-
தாய்க்கு பின் என் பாரம் தாங்கியவளே ......
என் தாரமாக வந்தவளே...
உன் விரல் பிடித்தே காலங்கள் கடப்பேன்
உன் விழி பார்வை கொண்டே உன் அகராதி அறிவேன்...
மாலையிட்ட நாள் நேற்று போல் உள்ளதடி ..
எத்தனைகாலம் சென்றாலும் உன் அன்பு
திகட்டாத திரவியம் எனக்கு..
இன்னும் நூறு ஆண்டு வாழ்வோம்
நம் காதலும் காலமும் காவியம் ஆகட்டும்
Happy Anniversary
Ramesh 🥰 Magesh-
ஒரு நீளமான
கவிதையின்
அருகில்
குட்டி
ஹைக்கூ ....
வாசித்து
பார்த்தால்
இரண்டுமே
இன்பம் தான்
_ இப்படிக்கு
நீயும் நானும்-
நீயின்றி ......
நீ ஓடி விளையாடிய தரையெல்லாம்
கரை படிந்தது போலும்
கிறுக்கி வைத்த சுவர் எல்லாம்
கலை இழந்தது போலும்
உன் மழலை மொழி மனணம் செய்து
எனை அறியாமல் உனை போல் பாவனை செய்து கொள்வது போலும் ...
நீ அலறிய சத்தத்தை எல்லாம்
ஒலி திருடிய கொண்டது போலும்
விடை பெறும் காலை
பொழுதில் கதறி அழுதது
காற்றில் கலந்து விட்டது போலும்..
வீடு அடையும் மாலை பொழுதில்
இறுக பற்றி கொள்ளும் உன் குட்டி விரல்கள் ,
எனை நினைவில் குத்தி எடுப்பது போலும்....
உன் வாசம் சேராமல் என் மூச்சு
என் வசம் இல்லாதது போலும்....
உணர்கிறேன் எந்தன் ராசாத்தி...-
எனை நேசித்த முதல் காதலே....
ஆண் மகவாய் அவதரித்திருந்தால்
ஆயுள் முழுக்க உன்னோடு பயணித்திருப்பேன்....
பெண் பிள்ளையாய் பிறந்து விட்டேன்..
உயிர் போகும் வரையில் உன்னுள் இருப்பேன்..
நான் உனக்கு கணம் என நினைத்திருந்தேன்...
நீயோ எனை உன் முன்றாம் கண் என்பாய் ..
என் பிறவி பயனாய் உனை ஆயுள் முழுக்க காப்பேன்...
ஒவ்வொரு பிறந்த நாளிலும் புதிதாய் பிறப்போம் நீயும் நானும்...
Happy birthday my love❤
-
காதலில் மறைத்து வாழ்தல் அழகல்ல .....
மறைத்ததை புரிதலோடு மறந்து வாழ்தல் அழகு..-
காதலில் மறைத்து வாழ்தல் அழகல்ல .....
மறைத்ததை புரிதலோடு மறந்து வாழ்தல் அழகு..-
உன் வரிகள்
தந்த போதை...
அதில் மயங்கிய எங்களுக்கு
இல்லை வேறு பாதை ....
உன் வரிகள் சுவாசிக்காத நாளெல்லாம் வாதை ...
பூலோகம் வந்த ஆண் தேவதை...
இனியாவது இவன் கவிகள் பாடுமா???
எங்கள் வலிகளுக்கு வழி நாடுமா???-
என் வெற்றிகளோ சோகங்களோ
நான் அனுபவிக்கும் முன் அது உன்னை தாக்கும்...
என் வெற்றிகளை நீ கொண்டாடினாய் ...
என் சோகத்திற்கு நீ மனம் கலங்கினாய்...
என்றும் எந்தன் பக்கபலம் நீ கண்ணுமணி...
காலங்கள் கரைந்து சென்றாலும்..
நம் அன்பு மறைந்து போகாமல்
இருந்திடட்டும்...
நாலைந்து வருடங்கள் நடந்தால் என்ன...
நாற்பதைந்து வருடங்கள் வந்தால் என்ன..
பிறந்த நாள் வாழ்த்து சொல்லவும்
மகிழ்வாய் கொண்டாடிடவும் என்றும் நான் இருப்பேன்..
(நட்பதிகாரம் part-2)
-