மனித வாழ்க்கையிலுள்ள
மிகப்பெரிய ஆச்சரியம்
அன்பு நிறைந்தவர்களை
எங்கே எப்போது எதற்காக
சந்திக்கப்போகிறோம்
என்பதும்
எங்கே எப்போது எதற்காக
பிரியப்போகிறோம்
என்பதுமே.
நா.பார்த்தசாரதி.-
என் உயிரின் மீதி!
👶 19.09.....
https://www.youtube.com/@anthianthi67
Instagram I... read more
ஆறுதலாய் வந்து
என் விழிநீரை
உன் இமைகள் வருடிடும்போது
தணிந்துதான் போகிறது
தணலாய் கொதித்த
என் மனது💕-
உன் கேசங்கள்
தவழ்கின்றன...
உன் காதல்
கவிதைபாடுகிறது...
உன் களைப்புகள்
இளைப்பாறுகின்றன.-
கல்லாய்தான் போனது
என் இதயம்.
என் காதலை
உன்னிடம் வெளிப்படுத்தியும்
உன் நிராகரிப்பால்
கல்லாய்தான் போனது
என் இதயம்.
-
இணைப்பிரியா நண்பர்கள்
பள்ளிப்பருவத்தில்.
படிக்கப்போறேன் படிக்கப்போறேனு...
எதிர்வீட்டு மாடியில்
பாய் விரிச்சு நல்லா தூங்கிட்டு
பரிட்சை பேப்பரில்
ஃபெயில் ஆகி வரும்போது
விழுகுமே அடி.....
என் முதுகு மட்டும் அதிராது
சும்மா பக்கத்துவீடும்
சேர்ந்து அதிரும்.-
என்றாவது ஒருநாள்
பார்க்கும் ஆவலில்
காத்துக்கொண்டிருக்கும்
என் காதலின் வலியை
அவளை தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கும்
என் விழிகள் உணருமா?-
வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த மிகப்பெரிய சுகம்
எதுவென்றால்
எல்லோரும் வெறுத்த நானும்
உன்னால் நேசிக்கப்பட்டேன்
என்பதே.-
ஒருதுளி நீரின் அருமை
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்
உயிரினத்திற்குதான் தெரியும்.-