இன்னும் யோசித்து
கொண்டிருக்கிறேன்
கிடைக்காத
வார்த்தைகளுக்கான
தேடுதலில் .....
சந்திக்க மறுத்த
சந்திப்பிழைகளில்
சத்தமின்றி
ஒட்டவைப்பதற்கு
உன்னையே எனக்குள்!-
யாசித்த யோசனைகள்
நிம்மதியை தரவில்லை
நினைவுகளின் சாயலையே
உதிர்த்து விட்டு செல்கிறது..❤️-
வண்ணங்களால் மயக்குவாய்
எண்ணங்களால் இயக்குவேன்...
காலத்தால் உதிர்வாய்
காயத்தால் உணர்த்துவேன்...
வாசனையாக வீசுவாய்
யோசனைகளை வீசுவேன்...
மனிதனைக் கொல்லும் மனமாக நான்!
என்னைக் கொள்ளும் மலராக நீ!
-
ஒருவரை குறை கூறும்
முன்பு அவர் சூழ்நிலையில்
நாம் இருந்திருந்தால் என்ன
செய்திருப்போம் என்று
யோசித்து பார்த்தால் யாரையும்
குறை சொல்ல தோன்றாது...!-
அவள் என்ன யோசிக்கிறாள்!
இவன் என்ன யோசிக்கிறான்!
ஒவ்வொருவரும் என்ன யோசிக்கிறார்கள்!
என யோசித்து யோசித்தே
கடவுளுக்கொரு யோசனை வந்தது!
"இனிமேல் யோசிக்கவே கூடாது"
ஆழமா தூறுவாருனா அம்புட்டுதேன்
கண்ண கட்டுது மாமு...
-
பாசம் வைக்கும்போது
யோசிப்பதில்லை!!!
யோசித்த பின்
பாசமே வருவதில்லை!!!
சிலர் மேல் .-
குடும்பத் தலைவன்.
தலை நிமிர்ந்து நடந்தால் மகிழ்வான
தருணங்களை யோசிக்கிறான்.
தலை குனிந்து நடந்தால் இகழ்வான
சூழல்களை யோசிக்கிறான்.
நேருக்கு நேராய் பார்த்து நடந்தால்
நிதர்சனங்களை யோசிக்கிறான்.
ஆனால்,
இன்னும் எந்த எல்லையையும்
தொடவில்லை.
-