நான் சொல்றத மட்டும் ம்ம் னு
கேட்டுக்கோ மா...
நீ பதில் சொல்லாத...
கேள்வியும் கேட்காத...
எப்போதும் எதையேனும்
கொட்டித்தீர்க்க
இப்படி ஒரு ஆள் தேவை தானே ?
எங்கும் எதையும் கொட்ட முடியாமல்
நகர்த்தி கொண்டே செல்லும்
இந்த வாழ்வில்...!-
தன்னை யாராவது தத்தெடுத்து
கொள்ள மாட்டார்களா என்ற அனாதைத்தன்மையோடே எப்போதும்
சுற்றி திரிகிறார்கள் மனிதர்கள்...
ஒருபோதும் அந்த ஏக்கத்தோடு
கைக்குலுக்கி பிரியாதீர்கள்...
அது ஒரு கொலைக்கு சமம்...!-
பொய்களின் குவியலுக்குள்
திணறும் உண்மையின் தத்தளிப்பு
பொய்யாகவே பிறந்திருக்கலாமோ...!-
நம்மளோட சந்தோஷம் யாருக்கும்
லட்சியம் கெடையாது...
நம்மள ஹேப்பியா வைச்சிருக்கனு
யாரும் பிறவியெடுத்தும் வரல...
நம்மள நம்ம தான் சந்தோஷமா
வைச்சிக்கணும்...
அதைவிட முக்கியமா...
யாருக்காகவும் அந்த சந்தோஷத்த
கொல்லாம பாத்துக்கணும்...!-
எல்லாவற்றின் இறுதியிலும்
எப்படியோ என்னையே
சேர்ந்து விடுகிறது...
ஒரு பழியோ
பாவமோ...
ஒரு வலியோ
கண்ணீரோ...
ஒரு குற்றமோ
குறையோ...
இப்படி எல்லாமும் ...
நானும் அதை அப்படியே
வைத்து கொள்கிறேன்...
யாருக்கும் கொடுக்க
மனமில்லாமல்...!-
எப்போதும் பேசிக்கொண்டிருந்ததற்கும்
எப்போதாவது பேசிக்கொள்வதற்கும்
இடையில் தான் ஒளித்து
வைக்கிறார்கள் மனிதர்கள்
தொடக்கத்தையும் முடிவையும்...!-
எழுதியது யாரென்று தெரியாது
ஒட்டிக்கொள்ளும் ஒரு கவிதையை போலத்தான்...
ஏனென்றே விளங்காது
நீண்டு தொலையும்
உன்மீதான ப்ரியங்கள்...!-