என் ப்ரியங்களில்
பிழைத்திருத்தம் செய்யாதே
ப்ரியனே...
பிழையாய் இருந்தாலும்
அது உனக்கான நேசம்...!-
சாளரத்திற்கு அப்பால்
பெய்யும் மழையை
போல தான்...
நீ
எமோஜியில் அனுப்பி
வைக்கும் அன்பும்...!-
உன் மீதான அதிருப்தி
ஆயுள் வரைக்கும் நீண்டு
கிடந்தாலும் ...
உன்னோட உறவை
முறித்து கொள்ள ஒரு
காரணம் கூட முன்வர
மறுக்கிறது...!-
....
ஆமா நான் தான் தப்பு....
தெரியாம சொல்லிட்டேன்....
சாரி....
போதுமா....
வேறென்ன சொல்ல...
மூன்று கால் வாதங்களிடம்...!-
மனிதர்கள் அவர்களுக்கு
உண்டான இயல்பிலேயே
தான் இருக்கிறார்கள்...
சில இயல்பு பிறழ்தவர்களுக்கு
தான் அதை ஏற்க
முடிவதில்லை...!-
அடுத்தவர்களின் சரி தவறுகளையே
சரி பார்த்து கொண்டிருக்காதீர்கள்...
உங்கள் சரி தவறுகளை
நிர்ணயிங்கள்...!-
கிள்ளியெடுக்கும்
விரல்களுக்கும் கொஞ்சம்
நறுமணத்தை ஈந்தும்
மலரினை போலத்தான்
அதீத அன்பும்...
மிதித்து நகரும் பாதங்களுக்கு
பாதணி ஆக துடிக்கும்...!-
இதை விட வேறெப்படி
சொல்ல முடியும்?
நீயெனக்கு யாரென்று
என் கண்ணீரின்
கனம் அறிந்தவன் நீ...!-
வேறென்ன செய்வது?
வினாக்குறி தான்
என்றாலும்
வசதிக்கேற்ப முற்றுப்புள்ளி
இட்டு விடுகிறார்கள் ...!-