கனவில் நீ தொடும் போதும்
நனவில் உணர்கிறேன்,
உன் ஸ்பரிசத்தை....-
❣️. தாய்த் தமிழை கண் போல கருதுபவள்...
❣️. எழுத... read more
பார்த்தும் பார்க்காதது
போல் கடந்து
போனாலும்,
அவன் காதலை
அவள் உணர்ந்து
கொள்ளாமல்
இருந்ததில்லை....-
தீரா என் ஆசைகள்
அத்தனையும்
அள்ளி
அணைத்துக் கொண்டு
உறங்க முற்படுகிறது,
என் இதயம்....-
இந்த இரவு மட்டும் அமைதியாக கடந்து விட்டால்
போதும்,
அவன் வரும் நாளுக்கான ஒரு நாளைக் கடந்து விட்ட நிம்மதியில், உறங்கி விடுவேன் நான்....-
இப்போது தேவையாய்
இருக்கிறது...
புரிதல் இல்லாமல்
இருக்கும்
ஓர் உறவை,
இன்னும்
புரிந்து கொள்வதற்காக....-
பக்கம் பக்கமாக எழுதிய பின்னர்,
அவசரமாக அழித்து முடிக்கும்
வார்த்தைகள்
நீ படிக்கக் கூடாது
என்பதற்காக இல்லை...
நானே படித்து மீண்டும்
வருந்தி விடக்கூடாது
என்பதற்காக மட்டுமே....-
நீ பார்க்கும் பார்வைகள்...
நீ பேசும் வார்த்தைகள்...
நீ காட்டும் மௌனங்கள்...
நீ காணும் தேடல்கள்...
நீ போடும் சண்டைகள்...
நீ தரும் அரவணைப்புகள்...
அனை(ணை)த்தும்
நானாக வேண்டும்....
-
காத்திருக்கும்
மணித்துளிகள்
எல்லாம்,
மரணிக்கும்
வலியைத் தந்தாலும்
ஏதோவொரு
அமைதி
வேண்டும் என்றே
கேட்கிறது,
என் தனிமை....-
கவிதையும்
காதலும்
அழகு தான்...
நீயும்
நானும்
சேர்ந்திருக்கும்
வரையிலும்....-