உதிரும் நிலையிலும்
அவன் நினைவில் தங்கியது
பசுமை நிற காதலியே..!
ஒரு காதல் என்பது.. 🌹
வரிகள் கீழே... 👇-
இசைக்கும் வரிகளை
உன் விரல்கள் தாலாட்டும்
புது ராகம் கேட்கட்டும்.
இசைந்து சமைத்த வரிகளில்
நான் இளைப்பாற சீராட்டும்
கவி தாகம் பிறக்கட்டும்.-
கண்ணாடி கூட்டுக்குள்
வெள்ளை பூந்தோட்டம்.
கதவு திறக்க கைப்பிடியாய்
பிறை நிலா..!
-
கொடுத்தனுப்பிய காசுகளுக்கு
வாங்கிய பொருள்கள்போக
மிச்சம் பத்து பைசா.
மீதி காசு தராமல்
எள்ளுருண்டை தருவார்
மளிகைக்கடை தாத்தா.
பாக்கி ஏதும்
இல்லையென்றாலும்
பொட்டுக்கடலையோ
தேங்காய் சில்லோ
ஒரு அச்சு வெல்லமோ
கொசுறாக தருவார்.
யாராவது ஏன் இப்படி
என கேட்டால்,
ஆரோக்கியமான
எதிர்காலம்
குழந்தைகள் கையில்..!
வாய்விட்டு சிரிப்பார்
எங்கள் வட்டார
பொக்கைவாய் தாத்தா.!!🙏-
காங்கேயம் காளைகளே ஒடுங்கடா
கௌர்மென்ட்டு சாலையிலே...
காலு வலி தெரியாம நானும்
பாட்டு பாடிக்கிட்டு வாரேன்...
மருதண்ணனுக்கு கலியாணம் பண்ண
பொண்ண தேடிகிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும்கேளு தாரேன் ஹேய்...
காங்கேயம் காளைகளே...
இன்று நீ நாளை நான்
இசைஞானி
கங்கை அமரன் ஐயா
SPB சார்
என் நினைவில்...-
அவன் :
இரு இதழ்கள் கொண்ட பூ
அதை,
நான் தொடும் வாய்ப்பு..!
சின்னக் கிள்ளலில்
ஒரே ஒரு விள்ளல் எடுத்து
சுழற்றி விளையாட
அனுமதி தந்த வள்ளல் நீ..!!
-
தாங்கிக்கொள்ள நீ இருந்தால்
தங்கிக்கொள்ள எனக்கு
சம்மதமே..!
தேங்கி செல்ல...
வாங்கி அள்ள...
சுழலும்
ஒரு காதல் என்பது,...!!-
இரவு நீளும்பொழுது
இசைஞானி எனும் மேதையால்
இன்னமும் தெளியா போதையில்
நான்.
14/06/25 சனி மாலை 6.45 மணி தொடங்கி 10.45 மணிவரை,
ஜனனி ஜனனி... தொடங்கி
தென்பாண்டி சீமையிலே வரை,
மேகங்களகூடி மழை இல்லா பாண்டிச்சேரி யில்
இடைவிடா இசைமழை..!
வேறு சிந்தனைகளுக்கு இடம் தராத
இதுவும் ஒருவகை தியானம்.!!
-