காத்திருந்து காத்திருந்து
காலம் கடந்தது தான் மிச்சம்
நினைவுகளே மீதியின் எச்சம்-
🦋கவிதைக்காக "கவிமலர் "(காரிகை)
🦋கதைகளில் உள்ள ஆர்வம் தான்
🦋கவிதைகளை எழுத... read more
காத்திருந்து காத்திருந்து
அவனும் வந்தான்
பார்த்திருந்து பார்த்திருந்து
அவளும் கண்டாள்
பூத்திருந்து பூத்திருந்து
காதலும் உணர்வாகியது
மலர்ந்திருந்து மலர்ந்திருந்து
கவிதையும் வசமானது
நேற்றிலிருந்து நேற்றிலிருந்து
கனவும் நனவானது
இன்றிலிருந்து இன்றிலிருந்து
பேச்சும் துணையாகியது
இப்போதிருந்து இப்போதிருந்து
தினுசு தினுசாக ஆவல் உந்தியது
நமக்கான வாழ்வு
நம் அருகே என்றது ❤️
-
இருவரின் இடையே திரை
மனதின் ஊடே கரை
விழிகளின் மொழியும் ஏக்கம்
இதழ்களின் வழியே தாக்கம்
இன்பத்தின் கூட்டில் நெருடல்
துன்பத்தின் ஏட்டில் வருடல்-
வலி மிகுந்தவற்றை
நினைக்காமல் இருக்க
அழுகையோ வரமாகிறது
வழி தந்தவற்றை
மறக்க கூடாதென
சிரிப்போ சாபமாகிறது-
சிறு கோபத்தைக் கூட
விட்டுக் கொடுக்க முடியாமல் தான்
இன்று ஏகப்பட்ட கொலையும் கொள்ளையும் நடக்கிறது-
இதழில் கவி எழுது
இனிமையின் வழியாக
இன்பத்தின் துணையாக
இதயத்தின் முத்திரையாக
இசையின் துளியாக
இன்சொல்லின் வனப்பாக
இளமையின் ரகசியங்களை வெளியிடுகிறதே-
சிறு கோபத்தைக் கூட தாங்க முடிவதில்லை
ஆனால் பெருத்த அமைதியை அடக்க முடிகிறது-
அடிக்கோடிட்டு புரிய வைக்கிறாய்/
உன் கண்கள் தான் வேணுமடி/
இதை எப்படி உனக்கு சொல்ல/-