நேர்வழி எப்போதும்
குறுக்கு புத்தியை சிந்திப்பதில்லை
குறுக்குவழி எப்போதும்
நேர் புத்தியை அங்கீகரிப்பதில்லை
எந்தவழி வேண்டுமென்பதெல்லாம்
அந்தந்த நேரத்து முடிவுகளே...-
🌜90's KiD🌛
🍃valparai,Coimbatore🍃
🐺Ha-Ku-Na-Ma-Ta-Ta🐗
📩Email: mail2krishnada... read more
தள்ளுவண்டிகளின் சங்கமமதில்
பொரிப்பொட்டலத்தில் மடித்த
கதைகளையெல்லாம்
சற்றே தள்ளிநின்று
கேட்கின்றது நிலவு
நிலவின் சுவாரசியத்திற்கு
கொஞ்சம் நிலக்கடலையையும்
மிளகாய் பொடியையும் சேர்த்து
மசாலா கூட்டி
வாசிக்கின்றது இரவு
இரவின் வாசிப்பிற்கு
கண்சிமிட்டாமல் வெளிச்சமிடுகிறது
உயர்ந்துநின்ற மின்கம்பம்
இதற்கிடையில்
மெல்ல மெல்ல
தேநீர் கடை நோக்கி
நகர்கின்றது;
காரம் தாங்காத நிலவு.-
சற்றுநேர அமர்வு
அது அமர்வு மட்டுமல்ல
சிறிதொரு ஆசுவாசம்
சிறிதொரு இரசிப்பு
சிறிதொரு யோசனை
பிறகொரு தேடலில்
துவங்கி கலையுமது
தேடலெல்லாம் முடிந்தபின்
மண்மீதமரும் இலையாய்
முற்றிலும் ஓர் அமர்வு-
தனக்கான இடம்
எதுவென்றறியாமல்
இன்றளவும்
அலைந்துகொண்டிருக்கிறது;
பணம் ஓர்
இலக்கற்றப் பயணி-
எங்கே இருந்தால்
மகிழ்ச்சியாக இருப்போம்
என்று எண்ணுவதை விட
எங்கிருந்தாலும்
மகிழ்ச்சியை காண்போம்
என்றிருந்தால்
அந்த மகிழ்ச்சியே
நம்மைத் தேடி வரும்
ஞானத்தைத் தேடுங்கள்!
அத்தேடலில் கொஞ்சம்
உங்களையும் தேடுங்கள்.-
செல்லுமிடமெல்லாம்
தன் சிறகடிப்பால்
புதுக்கவிதையொன்றை
எழுதிச் செல்கிறது
வண்ணத்துப்பூச்சி
முதிர்ந்த இலையொன்று
வண்ணத்துப்பூச்சி
தன்னுடலில் எழுதிய கவிதையை
வானத்திற்கு காண்பித்துவிட்டு
பிறகு பூமிக்கு காட்டிவிடும்
முனைப்பில் கிளையிலிருந்து
புறப்பட்டது
இப்பொழுது
மண்ணில் அக்கவிதையின்
நேரெதிர் பிம்பம்
வேறொரு கவிதையானது.-
வாழ்க்கை என்றொரு
முடிவில்லா பாடத்திட்டம்
அதனைக் கற்று எழுதயெழுத
தத்துவங்கள் தீர்ந்துபோவதில்லை
மாறாக, வாழ வாழ
அவை பிறக்கின்றன-
கேள்விகள் ஒருபோதும்
மரிப்பதில்லை
அவை உதித்தமட்டில்
நீண்டு செல்பவை
பதில் கிடைக்கும்
என்கிற ஆவலும்
காலம் பதில்சொல்லும்
என்கிற மொழியும்
சந்திப்பதற்கு முன்பாக
யாரோ ஒருவரிடம்
தனக்கான பதிலை
சொல்லிவிட்டுச் செல்கின்றன
அக் கேள்விகள்-