02.08.2025 (சனி)
அன்பென்ற
உயிர் இல்லாமல்
அழகென்ற ஒன்றை
வைத்துக்கொண்டு
உடலால்
என்ன செய்ய இயலும்...
(திருக்குறள் 👇)-
கவிதைகள்... #கவி_அருவி
நீள் கவிதைகள்... #குமுதமீரா
புத்தகம் பகிர்வு #m... read more
01.08.2025 (வெள்ளி)
வரண்ட பாலைவனத்தில்
பட்டமரம் தளிர்த்து
பயனற்ற மரம் ஆவதும்
அன்பிலா ஒருவர்
வாழும் வாழ்க்கையும்
ஒன்றாகும்...
(திருக்குறள் 👇)-
கொடுத்ததெல்லாம்
ஏற்று
இதயம் கனத்து செல்கிறேன்
இது போதும்
இனி எதுவும் வேண்டாம்...-
ஆனால்
ஒரு முறை கூட
நினைத்து பார்கவில்லை
சாலையில்
நிழல் தரும் தருவை
நட்டது யாரென்று?!-
31.07.2025 (வியாழன்)
சரியென்று தவறென்று
அறிந்தும்
அதை சரிசெய்யாது
வாழ்பவர்
வெப்பத்தில் துடிக்கும்
புழுவின் நிலை அடைவார்...
(திருக்குறள் 👇)-
இந்த நொடி
நினைத்துப்பார்க்க
கிடைக்கும்
ஒரே ஒரு ஆறுதல்
'தேவை என்று வந்தால்
நாம் நினைவுக்கு வருகிறோம்
என்ன பாக்கியம் செய்தோமோ?!'
-
நீ இப்படித்தானென்று
நான் புரிந்து கொண்ட
நாட்கள் கடந்து விட்டது
நான் இப்படித்தானென
நீ உணர வேண்டிய
நாட்கள் வந்துவிட்டது...-
நம்பிக்கையின்மையால்
தோன்றிய
உறவென்ற வேரில் விழுந்த
முதல் கோடாரி...-