Kumuda Selvamani   (Meera)
9.7k Followers · 506 Following

read more
Joined 24 October 2018


read more
Joined 24 October 2018
3 HOURS AGO

சாட்டையால்
முள் போல்
உரையாடலில்
சில சொல்
அடிக்கும் போது
தெரியாதது
எடுக்கும் போது
துடித்து போகிறது

வலி...

-


5 HOURS AGO

நாம் போகும் பாதை
சரியென்று நம்பவைத்து
உச்சிக்கு அழைத்து சென்று
சரியில்லையென
விமர்சனம் செய்து
தள்ளிவிடும் மனிதர்
கலியுக கடவுள்...

-


5 HOURS AGO

எத்தனை
உயர்ந்த நிலையில்
இருந்தாலும்
பிறர் செய்யும்
உருவ கேலி
அவரை
உருக்குலைத்து
போடும்...

-


5 HOURS AGO

உற்று கவனித்தால்
நிலவிலும்
கறை காணலாம்

கவிதைக்கு
அது தேவையற்றது...

-


17 HOURS AGO

சொல் அம்புகள்
பல கொண்டு
நீ கொல்கிறாய்...

கொடுப்பதற்கோ
இவ்விடம்,
ஓர் உயிர் தான்
இருப்பதை
மறந்து...

-


19 HOURS AGO

26.04.2024 (வெள்ளி)
நற்செயலாக இருப்பினும்
வலியவர் விரும்பாத ஒன்றை
எளியவர் செய்வது
எதிர்வினையாற்றும்...
(பழமொழி 224👇)

-


25 APR AT 5:19

25.04.2024 (வியாழன்)
அறிந்தவர்கள் முன்
அறியாதவர்கள்
அமைதி காப்பதே
அனைத்திலும் சிறப்பு....
(பழமொழி 233👇)

-


24 APR AT 19:58

உரையாடல் நிகழாத
தருணத்தில் எல்லாம்
உன் குரலில்
உன் வரிகளை வாசிப்பதே
போதுமாகிறது ‌‌...

-


24 APR AT 19:54

அவசரத்தில் உண்ட
முதல் கவளம்
நாவை சுட்ட பின்
ஆற வைத்து உண்டாலும்
ருசி தெரிவதில்லை...

-


24 APR AT 8:06

நீ வருவாய் என...

-


Fetching Kumuda Selvamani Quotes