உயிருக்காக என்னையும் அறியாமல்
மூக்கால் சுவாசிக்கிறேன்!...
உயர்வுக்காக என்னையே அறிய
நாக்கால் வாசிக்கிறேன்!...-
மலர ஒருநாள்
வாட ஒருநாள்!...
மகிழ ஒருநாள்
வருந்த ஒருநாள்!...
விழ ஒருநாள்
எழ ஒருநாள்!...-
கருவறையில் அன்னைக்குப் பரிசாகி
கல்லறையில் மண்ணுக்குப் பரிசாகிறது.....
"வாழ்க்கை"-
என்னை
முதுகில் சுமந்த உம்மை
முதுமையில் சுமப்பார் அவர்!..
என்னை
மறவாது நினைக்கும் உம்மை
மறக்கவே மாட்டார் அவர்!..
என்னைப்
பார்த்துக்கொள்ளும் உம்மைப்
பார்த்துக் கொள்வார் அவர்!..
என்னை
மகிழ வைக்கும் உம்மை
மகிழ்ச்சியால் நிரப்புவார் அவர்!..
என்னைக்
கைவிடாது பிடித்த உம்மைக்
கைவிடவே மாட்டார் அவர்!..
என்னை
உயிராய் நினைக்கும் உம்மை
உயிராய் நேசிப்பார் அவர்!..
என்னை
ஆசீர்வாதிக்கும் உம்மை
ஆசீர்வதித்து மகிழ்வார் அவர்!..
என்னை
ஆரோக்கியமாக்கின உம்மை
ஆரோக்கியப்படுத்துவார் அவர்!..-
வழியறியாத வேளையில்
விழிமூடி தேடிடும் என்னையும்
அழகாகக் கரை சேர்த்திடும்!...-
Nature speaks!...
Wait turns beautiful when
Nature inspires!...
Wait turns beautiful when
Nature nurtures!...
Wait turns beautiful when
We admire nature!...-