திருந்தாத மனிதர்கள்
"காயாத கானகத்தே"
என்ற கானமெல்லாம்
காணாமல் போக...,
இப்போது.,
கான்கிரீட் மரக்
காடுகளில்
கயவர்களின்
களியாட்டம் ..,
கசப்பான உண்மை-
25 JUN 2021 AT 21:32
4 DEC 2019 AT 22:06
மதிலில் பாதி மறைந்து
ஆடம்பரமாய் அலங்கரித்த
மரங்கள் அசைகிறது.
காடுகளை அழித்து கட்டிய
தொழிற்சாலை முன்பு . . . ?!-
25 JUN 2021 AT 19:56
பறவைகளின் வீடற்ற
அனாதவராக திரியும்
கீச்சுகளை அறியாது
தன் பயணத்தை தொடரும்-
25 JUN 2021 AT 20:52
அனைத்தும்
கேள்வி கேட்கின்றன....
எங்களை அழித்து விட்டு
காற்றைக் காசுக்கு வாங்குகிறாயே
முட்டாள் மானிடா என்று....-
26 JUN 2021 AT 3:00
உரிமையற்றதுடன் ஊடுருவும்
மனித பேய்கள் எங்கும் நிலவும் வரை
என்றென்றும் எங்கெங்கும்
திருட்டே முதலாய தொழிலாய்!!!-
21 FEB 2021 AT 21:32
ஒரு புறம்
பறவைகளின்
எச்சங்களில்
வளரும் காடுகள்
மறு புறம் வீழ்த்தி
கொண்டிருக்கும்
மனித மிருகங்கள் !
-