பூவாசமாய் உன் நேசம்... 👇👇
-
உன் நினைவுகளால்
என் மனதில்
சுழன்று சுழன்று
என்னை குளிர்விக்கின்றாய்.-
உன் நினைவு கள்
என்னை உறங்க
விடுவதேயில்லை!
உன் கனவு கள்
என்னை விழிக்க
விடுவதேயில்லை !
🌸அழகி🌸
-
என் வாழ்வில் உன்னை முதல் முறையாக பார்க்கும் போது..
என் வாழ்வில் உன்னிடம் முதல் முறையாக பேசும் போது..
என் தோளில் நீ சாயியும் போது..
என்னை உன் துணையாக ஏற்றுக்கொள்ளும் போது..
என்னிடம் முதல் முறையாக சண்டைப் போடும் போது..
உன் கண் அசைவில்..
உன் மீது நானும் என் மீது நீயும் நம்பிக்கை வைக்கும் போது..
-
இப்போதெல்லாம்
விக்கல் வந்தால்
நான் தண்ணீர்
குடிப்பதேயில்லை.
நினைப்பது
நீயாக யிருப்பதால்
அது சிறிதுநேரம்
நீடிக்கட்டும் என்று
விட்டுவிடுகிறேன்💕
-
நன்றி செலுத்துகிறேன்
இறைவனுக்கு - பார்வை
கொடுத்து உன்னை ரசிக்க -
வைத்ததற்காக.......-
நடப்பதனைத்தும் உன்
செயல்கள் வழியே
தான் தொடங்குகிறது..
பின் அதில் கிடைக்கும்
வினை முழுமையும்
உன்னை மட்டுமே சேரும்..-
பொழுது சாய்ந்தால்
பூந்தோட்டமாகவும்
விடிந்து பார்த்தால்
வெறுந்தோட்டமாகவும்
இருக்கிறதடி
உன் அருகாமை
என் கனவினில்💕-
இவ்வளவும் உனை நினைத்து
இருந்தது போதும்...
உனக்குள் மாற்றம் ஏதும்
காணப்படவில்லை
நான் மற்றும் உனக்காய்
உருக வேண்டியது இல்லை
நானே எனை மாற்றிக்
கொள்கிறேன்!
மன்னித்து விடு....-