புத்தக பக்கங்களாய்
நம் காதல் எழுந்தது,
முதற் பக்கம் ஒரு முற்றமொழியாய்,
நீ சிரித்ததுடன்
தொடங்கியது
அந்தக் கதையின் மேடை.
மீண்டும் மீண்டும்
வாசிக்கத் தூண்டும்
வரிகள் போல,
உன் கண்ணிழியில்
மறைந்த என் கவிதை,
அதிகாரங்களை மாற்றிக்கொண்டே
சென்றது.
-
"காகித கப்பல் ஒன்று உன்னிடம் செல்வதற்காக... என் மௌனத்தில் எழுதப்பட்ட கடிதம் கொண்டு மழையில் மிதந்தது."
-
உன் கைகள் கோர்த்து நடக்க,
நான் எதிர்பார்த்த எல்லா நாள்களும்
நேற்றாகி விடுகிறது,
ஏனென்றால் இன்று நீ என் பக்கத்தில் நடக்கிறாய்.-
"Love has no age".
A couple whose love never changes, even as the years pass...
Their hair may turn silver, their steps may slow,
But in their hearts, the same warm winds still blow.-
"முள்ளாக மாறிய உறக்கம்,
முற்றிலுமாக சேதப்படுத்தி விட்டது கனவுகளை...
அமைதிக்காகக் தேடிய அந்த இரவுகள்,
இப்போது துக்கத்தின் நிரந்தர முகவரியாய் மாறின.
விழிக்கின்ற கண்கள் விடியலுக்காக அல்ல,
வலிக்கின்ற
நினைவுகளை எண்ணிச் சுமையென விழிக்கின்றன...
உறக்கம் என்ற வார்த்தைக்கே
இப்போது பயம் பற்றிக் கொள்கிறது
ஏனெனில் அதிலேதான்
என் கனவுகள் உயிரிழந்தன...-
"இளங்காலை பூக்களாய் விழிக்கிறது பூமி
அழகு என்பது ஓர் அமைதி என்பதை
மௌனமாகக் கூறுகின்றன பூக்கள்."-
"இறுதி கதை" என்பது
வெற்றி பெற்றவனின் பெருமை அல்ல —
விழுந்தும், சிதைந்தும்,
பிரசவ வலியில் பிறந்த அர்த்தமுள்ள உயிரின் சத்தம்தான்.
👇🏻👇🏻👇🏻👇🏻
-
அலை ஒன்று கடலின் செவியில்
தூய காதல் வார்த்தை பேச,
அவள் பாதம் நனைந்தது நிசப்தமாய்,
புனிதக் கண்ணீராய் சிதறியது துளி துளியாக...
அலைகள் ஓயாமல் திரும்பி வந்தது,
அவளின் பாத சுவடுகளை முத்தமிட்டுத் துடைத்தது;
துடைத்தாலும் அவளின் நினைவு போல,
மீண்டும் மீண்டும் பிறந்தது உயிரோடு'
அவள் பாதத்தை தொட்டு செல்ல வேண்டும் என்று...-
ஆறுதலாக
நீ வந்தால்,
என்னைத் தேடி தேடி
தேய்ந்த நாட்களும்
ஓய்வு கொள்கின்றன."
"விழிகள் தேடிய
அமைதி,
கண்கள் மூடியதும்
நீயாகி நிற்கும்
ஆறுதலாக நீ வந்தால்-