Deepa Deepa   (Deepa Deepa)
1.2k Followers · 314 Following

read more
Joined 29 June 2021


read more
Joined 29 June 2021
14 HOURS AGO

உங்களை போலவே
மற்றவர்கள் இருக்க வேண்டும்
என்று நினைப்பதில்
தவறில்லை தான்
இருப்பினும் உங்கள்
எண்ணங்களோடு ஒத்து போக
அவரை கட்டாயப்படுத்துவது
தவறில்லையா...
கள்ளம் இல்லாது உண்மை
சொல்லும் மனம் வாய்க்க
பெற்றவளுக்கு நீங்கள்
மன அழுத்தத்தை அள்ளி
அள்ளி கொடுக்குறீர்கள்
அவளின் நிலை உங்களுக்கும்
வரும் என்பதை ஒருபோதும்
மறந்து விடாதீர்கள்....

-


29 APR AT 19:11

உருக்கமாய் நினைத்தது
என்னை உருக்குலைய
வைத்திருக்கிறது...
உலகமாய் நினைத்தது
எனக்கு மரணத்தையொப்ப
பரிசை அளித்திருக்கிறது...
எத்தனையோ வலிகள்
குத்திய போதெல்லாம்
சாதாரணமாய் கடக்க
நினைத்ததுண்டு...
இப்போதும் அப்படித்தான்
கடக்க முயல்கிறேன்...
அன்பில் எத்தவறும்
இழைத்திடாத எனக்கு
இப்படியொரு தண்டனை
உன்னால் கொடுக்க
இறைவன் விதித்தது
எவ்வகையில் நியாயமென்று
இப்போதும் என் கேள்விக்கு
பதில் கிடைக்கவில்லை.......

-


28 APR AT 10:46

நினைவுகள் தப்பும்
கணங்களை தான்
எதிர்பார்க்கிறேன்...
என்னை மறக்க செய்து
நேசவலையில் சிக்க வைத்து
வேண்டாமென்று தூக்கி
எறிந்த அக்கனங்களை
பொறுக்க மாட்டாமல்
இப்போது என்னை நானே
சித்ரவதை செய்து
கொள்ளும் இத்தண்டனையில்
இருந்து மீண்டு வர...
எதையும் அறியாமல் எங்கோ
யாரோவாய் இப்போது
வேண்டுமானால் நீ
புன்னகைத்து கொள்...
என் வலி என்னோடு
கடக்கட்டும் உன்னை
ஒருநாளும் சேராமல்.........

-


25 APR AT 19:45

கொஞ்சமேனும் சலித்து
கொள்கிறதா...
நினைவு தப்பி தான்
மீள முடிகிறதா...
ரணத்தில் இன்னும்
குத்தி ஆற விடாது
பார்த்து கொண்டிருக்கும்
இந்த தவிப்புகளை
மொழிபெயர்க்க தான்
முடிகிறதா...
போதும் விட்டு விடு
என்று கூப்பாடிடும்
மனதுக்கு ஆற்றாமை
மட்டுமே எஞ்சி நிற்கிறது...
வலி கொண்டவள்
புலம்புகிறேன்
வலி கொடுத்தவன்
வாழ்கிறான்
விதி கொடுத்த இறைவனுக்கு
ஏன் இந்த
பாகுபாட்டின் மௌனம்.....

-


24 APR AT 12:55

நிமிடத்திற்கொரு முறை
மனதுக்குள் அடிக்கும்
அலாரமென்று உன் முகம்...
சத்தமில்லாமல் அழ
திராணியற்றவளாய் நான்...
ஒதுங்கி கொள்ள
முயற்சித்தும் எதாவதொன்றில்
படியும் இம்மூளை...
என்னை நடைபிணமாய்
மாற்றும் உன் நினைவின்
முயற்சிக்கு தேவை என்ன...
இவளின் நிரந்தர உறக்கமா?.....

-


22 APR AT 19:21

நொறுங்கி போயிருந்த
அத்தருணங்களை
வாரி சுருட்டி வெளியே
வீசி விட்டேன்...
இத்தருணம் மட்டுமே
நிஜம்...
இவ்வாழ்வு மட்டுமே
எனக்கானது என்ற
புரிதலில் கொஞ்சம்
என்னை
மீட்டெடுத்திருக்கிறேன்....
மற்றவர்களை புரிந்து
கொள்வதை விட
என்னை முதலில்
புரிந்து கொள்கிறேன்
அதுவே சரியாய்
இருக்கும் இனி......

-


21 APR AT 18:36

நேற்று மணி ஐந்தை
நெருங்கும் வரை
அங்கும் இங்குமென
நடமாடி கொண்டிருந்த
அச்சீவன் இப்போது
உயிரோடு இல்லை...
எத்தனை கனவுகளோடு
தன் வாழ்க்கையை
துவங்க காத்திருந்தது
அம்மனம்...
அடியெடுக்க கூட
விடாமல் அவ்வாத்மாவை
பறித்து கொள்ள
எப்படி மனம் வந்தது
இறைவனுக்கு...
இரக்கத்தின் உருவென
மனதில் பதிந்த
பக்தியில் கொஞ்சம்
கோபம் எட்டிபார்த்ததில்
தவறில்லை எனக்கு.....

-


19 APR AT 17:27

பிரிந்த தாயை
தேடும் மனநிலையில்
இருக்கிறேன்...
எப்போதும் உடனிருப்பேன்
என்ற உன் பொய்
வாக்குறுதிகளுக்கு
செவி சாய்த்து போனதால்...
எனக்கொன்றும் இல்லை
நிச்சயம் மீண்டு விடுவேன்...
நீ சத்தியம் செய்த உன்
தாயின் நிலையும்
உன்னை படைத்த இறைவனின்
நிலையும் நினைத்தால்
கவலையில் தோயும்
இந்த மனது...
அவர்கள் மீள்வார்களா
பார்ப்போம்.....

-


16 APR AT 10:57

கொஞ்சம் கொஞ்சமாய்
மனம் தேற்றி
கொண்டிருக்கிறேன்...
பற்றி கொண்டிருந்த
நேசங்களை நினைத்தால்
பாவமாய் இருக்கிறது...
என்ன செய்ய,
மறந்து போகாமல்
போனாலும் விட்டு கொடுத்தே
ஆக வேண்டுமே...
கடந்து போக,
இருப்பினும் இறைவன்
இப்படியொரு தண்டனையை
கொடுத்திருக்க வேண்டாம்....

-


15 APR AT 12:14

நேசனாய் நீ இருந்த வரை
வார்த்தைகளுக்கு பஞ்சம்
இருந்ததில்லை...
யாரோவாய் நகர்ந்த பிறகு
வெற்று காகிதம் தான் நான்
மௌனத்தில் கரைந்து
கொண்டிருக்கிறது...
வார்த்தைகளும் வலிகளும்
இருந்தும் புன்னகைத்து
கொண்டுதான் இருக்கிறேன்
விரக்தியின் விளிம்பில்.....

-


Fetching Deepa Deepa Quotes