நினைத்து பார்க்க
ஏதோவொன்றில் என்னை
நிலைநிறுத்தும் உன்
நேசங்களுக்குள்
மொத்தமாய் தன்னை
இழந்து விட தோன்றும்
இவளுக்கு தெரிந்ததெல்லாம்
ஒன்று தான்....
இந்த வாழ்வின்
ஒட்டுமொத்தமும்
எங்கு சென்றாலும்
உன் ஒருவனை மட்டுமே
சுற்றிகொண்டே துடிக்கிறது
இதயமாய் என்பதே அது......
-
நடுவில் என்றும்
புன்னகையை உதிர்க்க
மட்டுமே வரமாய்
வாங்கி வந்தவள் இவள்.... read more
அப்பா...
அவரால் உருவாகி
அணுஅணுவாய் செதுக்கப்பட்டு
அளவில்லா அன்புகளில்
அகம் மகிழ்ந்த நாட்களை
அவதியுரும் நேரத்திலும்
அரவமான காலத்திலும்
அணைத்து கொண்டிருப்பவள்...
அவசியமான நேரத்தில்
அசரீரியாய் அவர் வார்த்தைகள்
அச்சமின்றி இவ்வாழ்க்கைக்கு
அடித்தளமானதை மறவாதவள்...
அன்னையின் அத்தனை
அம்சமும் கொண்ட என்
அகிலத்தின் முதல் நேசனுக்கு
தந்தையர் தின
வாழ்த்துக்கள் 💐💐💐❤️
-
விழிகளுக்கு காட்சிப்படுத்திட
வரிகளை கொடுக்க
முனைந்த என்னால்...
மனதை மொழிபெயர்த்திட
கேட்கும் காதலை தான்
சமாதானம் கொள்ள
வைக்க வழியை அறியாமல்
தடுமாறுகிறேனோ....
ஒருவேளை உன்னால்
முடியும் என்பதால் தான்
ஏங்கி சாகிறதோ
இவ்வாசைகள் அனைத்தும்....-
உதடுகள் சொல்ல மறுத்த
உன் பெயரை தான்
நொடிக்கொரு முறை
உச்சரித்து கொண்டே
இருக்கிறது இந்த மனம்...
எத்தனையோ முகங்களில்
அப்பெயர் இருந்தாலும்
உன்னை மட்டுமே
இவள் கண்கள் அப்பெயரில்
தேடியது எப்போதும்...
நீயென்றால் மட்டும்
இவளின் நேசங்கள்
கடலலையை காட்டிலும்
முந்தி கொண்டு முகத்தில்
முகாமிட்டு கொள்கிறது நேசனே.....-
ஏனென்று கேட்க
ஆளில்லா மனத்தாங்கலில்
தான் உன் அறிமுகமெனக்கு...
இப்போது என்னை
யாரென்று கேட்டு
அறிய முடியாமல்
கேள்வி கணைகளை
சேமித்து கொண்டிருக்கிறேன்
உன்னிடம் பதில் வாங்கிட...
வரமளித்த மிச்ச நாட்களை
அருகில் வாழ்வதா இல்லை
நினைத்தே மீள்வதா
என்பதை நீதான்
சொல்லிட வேண்டும்
எனக்கருகில் வந்து.........
-
உன்னை பற்றி கவிதை
எழுதிட சொல்லி கேட்கும்
இந்த நேசங்களுக்கு
எப்படி சொல்வேன் நான்
இவள் கவிதைகளுக்கும்
அப்பாற்பட்ட உயிராத்மா
நீயென்று...
வார்த்தைகளில் மட்டும்
சொல்லிடாமல்
வாழ்க்கையென்று இவள்
வாழ்கிறாள் என்பதையும்
சேர்த்து தான்....
-
பக்கம் நெருங்காமல்
பார்வையில் கொஞ்சமும்
நேசபோதை ஊட்டாமல்
அழைப்பில் எப்படி
என்னை கிறங்க செய்கிறாய்
என்று நான் நினைத்ததுண்டு...
உன் மேல் கொண்ட
அளவுகடந்த அன்பின்
கிறுக்குத்தனத்தை எல்லாம்
நானாய் வளர்த்து கொண்டேன்
என்பதை அறியாமல்.....-
இறைவனிடம் கரம் ஏந்தி
நிற்பது போல தான்
உன்னிடம் கூட நான்
அவ்வப்போது இந்த அன்பை
யாசகம் கேட்டு
ஏந்தி நிற்கிறேன்...
நீ என்னை தவிர
அனைவருக்கும் வாரி வழங்கி
கொண்டிருக்கிறாய்
உன் அன்பை மட்டுமல்ல
நேரங்களையும்...
தவறி போன பின்பு நீ
இறைவன் முன் எதுவமற்று
நின்றாலும் கூட
நீ எனக்கு மறுத்தது போல்
உனக்கு கொடுக்க அவனும்
மறந்து போவான் என்பதை
உணர்வாயோ......
-
உன் விழிதீண்டா மொழிகள்
அத்தனையும் என் நேசமென்று
நினைக்கையில் எல்லாம்
மெல்லிய புன்னகையாய்
மலரொன்றை விதைத்து
உன்னிடம் வெளிப்படுத்த
முற்படும் இம்மனதுக்கு
வெட்கங்களை சொல்லி
தர கொஞ்சம் மறந்து தான்
போனேன் போலும் நானும்....-
நகர்ந்து கொண்டிருக்கும்
இக்காலங்களுக்குள்
சமர்ப்பிக்க முயல்கிறேன்
உன் மீதான நேசங்களை...
வேண்டாமென்று
என்னை நோக்கியே
திரும்பி வரும் மனதை
கட்டுக்குள் வைக்க
தவறித்தான் போயிருக்கிறேன்
நானும்...
அத்தனையும் நீயென்று
நானுருவாக்கியவை
வெற்று கானல் நீர்
என்றறிய இத்தனை வலிகள்
தேவைப்பட்டு இருக்காது.....-