நீ நெருங்கி வருவாய்
அகம் மகிழ செய்வாய்
அடைக்கலமென உன்னில்
நான் நிரம்புகையில்
வேண்டாமென்று இறைத்து
விட்டு செல்வாய்...
அப்படி நீ செல்லும்
தருணங்களில் மிச்சமில்லாது
உன் நியாபங்களையும்
அழித்து விட்டு செல்லாமல்
ஏனோ என்னை மூச்சு
முட்ட நேசம் செய்ய
விட்டு செல்கிறாய்
கொடுமை காரனே.........
-
நடுவில் என்றும்
புன்னகையை உதிர்க்க
மட்டுமே வரமாய்
வாங்கி வந்தவள் இவள்.... read more
விழிமுனையில் விழும்
நீர்த் திவலைகளுக்கு
எங்கனம் தெரியும்
உன் மீதான நேசம்...
என்னை அணுவணுவாய்
கொல்ல காத்திருக்கும்
நினைவு சுழலில்
உன் முகம் மட்டுமே
அச்சூழ்நிலையை மீட்டும்
வரமென்று...
உனக்கு பிடிக்காத என்னை
உன் சாயல் நேசிப்பதை
உன்னால் ஒருபோதும்
தடுக்கவே முடியாத
ஒன்று தானே......
-
என் நினைவுகளின்
பின்னால் நீ தழும்புகளாய்
மிச்சமிருப்பதை
மனம் வேண்டுமானால்
மறுத்து விடும்...
விழிகளுக்கு ஏனோ
எந்த எச்சரிக்கை செய்தும்
பலனளிக்காமல் தான்
போகிறது....
எங்கோ கேட்கும்
உன் பெயரில்
முதல் சொட்டு நீரை
உகுத்து விடுகிறது
என்னை கேட்காமலேயே
நேசத்தை மறக்க
முடியாமல்........
-
வியாபித்து கிடந்த
ஏக்கங்களுக்கு எத்தனை
எதிர்பார்ப்புகள்
இருந்து இருக்கும்...
மௌனத்தை ஆடையாக்கி
போர்த்தி கொண்டிருந்ததை
எவரும் அறிந்திருக்க
போவதில்லை தானே...
உருக்கமாய் புலம்பும்
அந்நேரத்து உணர்வின்
பிழம்பை வரிகளில்
எழுதி விட முடியுமா...
இருட்டின் பக்கங்களில்
மறைந்து போன
பலரால் உயிருடன்
சிதைக்கப்பட்ட அவ்வாத்மாவை
இனியும் புதைத்து
என்ன ஆக போகிறது...
இறப்பதற்கு முன்
எரியூட்டிய பிறகு........
-
விழி நுழைந்து
மொழி களைந்து நீ
உரையாடிய தருணங்களை
மென்று முழுங்கி
கண்ணீரோடு
அருந்தியாயிற்று...
இனியென்ன என்று
கேட்காத இடத்தில்
நீ இருந்து கொள்
உனக்கு பதிலுரைக்காத
வெற்றிடத்தில் நான்
காணாமற் போகிறேன்
இனியேனும்.......-
கடந்து போன
மணித்துளிகளில்
வழிந்தோடிய நீர்த்துளிகளை
நீ சேகரித்து பாரேன்
ஒருமுறை...
இவளின் ஆசைகளும்
ஏக்கங்களும் பெரும்பாடுகள்
கொண்டு புலம்பி
தள்ளியதை எச்செவிகளும்
கேட்காது திராணியற்று
நின்றதை...
எங்கனம் எடுத்து
சொன்னாலும் அதில்
ஒன்றுமட்டும் மிச்சமிருப்பதை
எதுவென்பதை நான்
சொல்லித்தான் புரிய
வேண்டுமா என்ன.......-
எத்தனையோ விதங்களில்
அத்தனை மெனக்கெடுகிறேன்
உனக்கென்று பிரத்யேகமாய்...
சட்டென்று உதறிடும்
உன் உள்ளம்தனை
அறிந்தும் கூட...
எவ்வளவு பட்டாலும்
திருந்தாத இந்த மனதுக்கு
நீ கொடுக்கும் அவபெயர்கள்
ஒருபோதும் வலிப்பதில்லை...
காரணம் உன்னளவில்
சொரணை இல்லையென்பதாய்
இருக்கட்டும் பரவாயில்லை
ஆனால் இதுவே என்
நேசத்தின் வரம்......-
விடாப்பிடியாய்
வேண்டுமென்று
நினைத்தவைகளை
இப்போது வேண்டவே
வேண்டாமென்று
விட்டேத்தியாய் நினைக்க
துவங்கி விட்டது மனம்...
ஏங்கி சாகும் நிலைக்கு
வந்த பிறகே
சில நேரங்களில் புத்தி
புதிதாகுகிறது...
நம்மை தொலைத்து விட்டு
அடுத்தவரை நாடுபவர்களுக்கு
நாம் தங்கம் என்பதை
நிரூபிக்க வேண்டாம்
ஒருபோதும்...
ஆம்!அழகே குறைந்தாலும்
தரத்தில் சிறந்தவர்கள்
என்பதை காலம்
உணர்த்தும் ஒருநாள்......-