சில நேரம் எம்மை நாமே
நகர்த்த வேண்டி இருக்கிறது...
எமக்கு கிடைக்காத பிடித்த
ஒன்றுக்காக அல்லது கிடைத்த பிடிக்காத
ஒன்றுக்காக ..பல நேரங்களில் பொறுத்தும்,
சகித்தும், சமாளித்தும் கொள்ளத்தானே
வேண்டிருக்கிறது மனது...
அவ்வளவு எளிதாக அனைத்தையும்
உதறித் தள்ளி விட்டு நகர முடியாதுதானே -
காலம் நாம் நினைத்ததை கிடைக்கச் செய்து..
அல்லது கிடைத்ததை ஏற்றுக் கொள்ளப் செய்து,
அனைத்துக்கும் விடை கொடுக்கிறது...
இப்போதெல்லாம்-
சுற்றி வர மௌனம்...
முகத்திற்க்கு மெல்ல குளிர் காற்று
வாசிக்க நல்ல வார்த்தைகளோடு
புத்தகம்.. இடையே இணைப்பாறி
யோசிக்க கொஞ்சம் பிரச்சினை...
இவ்வாறு இருந்தால்
இன்னொரு பொழுதையும் கொஞ்சம்
கடன் வாங்க மனு அனுப்பலாம்...
-
பாவம் இக்கால இளசுகளுக்குத்தான்
கிடைக்கவில்லை மாட்டுவண்டி
கடகடப்பில் கடந்த அந்த
பொற்கால பாக்கியம்
-
உன் உலகம் நானடா என்பதற்க்கும்
என் உலகம் நீயடா என்பதிலும்
எத்தனை ஆழமான உரிமை வேறுபாடும்
உடமை வேறுபாடும்
புதைந்து கிடக்கிறது......-
வார்த்தைகளால் காயப்படுத்தி
தர்ம சங்கடங்களுடன் பிரிவதை விட
புறக்கணிப்புகள் நல்லம்..நாமாக
புரிந்து கொண்டு தூரமாவதற்கு....-
காலங்கள் முழுவதும் கலவரம் நீளுமா ..
வார்த்தைகள் முழுவதும் முயற்சியை
விமர்சித்து எதிர்மறை உரைப்பதால்....
மலர்களின் விடைபெறல் போன்று
உதிர்த்துக் கொள்ளப் பழகுவோம் -
முயற்சிக்கான எதிர்மறை எண்ணங்களை.-
மனித சுதந்திர இறக்கைகளை இறுகச் செய்து விட்டு
அப்படி எதனை சாதிக்க துடிக்கிறார்கள்
உலக வல்லரசுகள் .....-
உங்கள் உலகத்தை வேண்டுமானால்
உங்கள் கைகளுக்குள் வசியப்படுத்த
முயற்சியுங்கள் தவறில்லை....
கட்டுப்பாடாலும் விமர்சனத்தாலும்
இன்னோர் வாழ்க்கையை
அடிமைப்படுத்தி உங்களிடம் சுதந்திரம் கோரும்
சுதந்திர போராளியாக்க ஆசைப்பட வேண்டாம்
-
நேர்த்தி தவறித வளர்ச்சியாகிட்டு
பண்பாடும் நாகரீகமும்..
யாரை குறை சொல்வது-