"சாப்பிடும்போது நடுவுல எழுந்திருக்காதேனு
சொன்னா கேட்கவே மாட்டியா நீ..."
திட்டிக்கொண்டே இருப்பாள் பாட்டி..
இப்போது திட்டுவதற்கு பாட்டியும் இல்லை..
உட்கார்ந்துச் சாப்பிட நேரமும் இல்லை..-
பெரிதாக
அவர்கள் ஒன்றும்
எதிர்பார்ப்பதில்லை
ஒருசில இன்ப
அதிர்ச்சியை தவிர...
(பாட்டியின் தங்கை)-
அங்கிருந்தபடியே உன்
பேரனின் கேள்விக்கோர்
விடை சொல்வாயா பாட்டி...!
~||| முகப்பில் எனது பாட்டி |||~-
"கடசீ வாய் சாப்டா
ஆன பலம் கிடைக்குமாம்"
என்ற பாட்டியின்
நுனிவிரலில் தீர்க்கப்படும்
ரசம் சாதத்திற்கு,
இன்று அன்னைகள் ஊட்டும்
அரை ஸ்பூன் 'செர்லாக்'
அற்பம்..!-
என் உயிரோடு
நீ கலந்தாலும்
உன்னை காண
முடியாமல்
தவிக்கிறேன்..
மறுமுறை பிறந்தால்
ஒருமுறை உன்
மடியில் மீண்டும்
தவழ்வேனோ என!
-
பாட்டி,
வீட்டின் மூத்த குழந்தை,
மருத்துவத்தில் மேதை....
கதைகளின் சொந்தக்காரி,
சுருக்கு பை சொத்துக்காரி...
அதிகார ராணி,
அனுபவத்தின் ஏணி...
நையாண்டி நாயகி,
நலன் காக்கும் சேவகி...
குலத்தின் வித்து,
விலை மதிப்பில்லா சொத்து....-
நீ மெல்ல மெல்ல
சொல்ல வரும் ஆசையை
புரிந்துகொள்ள தெரியாத
சிறு குழந்தையல்ல நான்.
நான் ஒரு வயதான பாட்டி.
😂😂😂😂😂🤣🤣🤣
-
அழுகை வருகையில்
ஆறுதல் தர
உன் மடி
எப்போதும்
மறுத்ததில்லை...
தோன்றும் கவலைகள்
திசை மாற செய்ய
உன் கதைகள்
என்றும்
மறந்ததில்லை...-
பாட்டியை கோவிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கும் தாத்தாவை கண்டு உணர்ந்தேன் உண்மை காதல் காலத்தால் மாறாது என்று....
-