Dhayaneswaran P   (Dhaya)
243 Followers · 64 Following

Poet
Writer
Translator
Joined 6 February 2018


Poet
Writer
Translator
Joined 6 February 2018
27 MAY AT 10:15

செய்யும் அக்கிரமங்கள்
வெளியே தெரியும் வரை
இங்கு ஒருவர் கூடச்
சீரழிவதில்லை.

-


15 MAY AT 20:00

வேவு பார்க்கும் போலீஸ் பேய்களின்
கண்ணில் முள் குத்தி
மறைவாய்ப் புணர்ந்த
காமக் கடவுளர்
சாய்கின்றனர்; 

•|| முகப்பில் விரியும் மைதானம் ||•

-


6 MAY AT 21:57

நாளை
கூச்சமின்றி
நான் உண்ணப்போகும்
MUTTON பிரியாணிக்கு
ஜீவகாருண்யம் செய்கிறது
இன்றைய இரவின் கோடை மழையில்
"பாவம் பறவைகள் என்ன செய்யுமோ"
எனும் கவலை.

-


6 MAY AT 11:20

"வானம் என்பது
பள்ளி மைதானம் போலவும்..
மேகம் என்பது
பஞ்சு மிட்டாய் போலவும்.."

இப்போதெல்லாம் வெறும்
கற்பனை விளையாட்டுகள்தான்..

நிஜம் கொடுமை செய்கிறது.

-


4 MAY AT 17:18

A WEDNESDAY

-


4 MAY AT 12:41

நிராகரிப்பட்டும் நச்சரிக்காது
எட்ட நின்றபடியே அவளுக்கென்று
உன் நேசத்தை உயிரில் கருவைத்துச்

சாகும்மட்டில்..

பிரசவிக்காதிருத்தலே பேரழகு!

-


3 MAY AT 21:10

மனை நிறைய செல்வம் கொண்டவன்
மன நிம்மதி தேடிப்போகிறான்..

மனம் நிறைய அன்பு கொண்டவன்
காதல் யாசகம் கேட்டுப்போகிறான்..

யாவும் இருந்தும் யார் இவர்கள்?
ஈகையின் இன்பம் அறியாதவர்கள்.

-


2 MAY AT 16:24

பாத்திரம் துலக்குபவர்..
துப்புரவுப் பணியாளர்..
Security gaurds..
அனைவரும் நேற்று
உழைத்தனர்..

அம்மாவும் தான்..

நேற்று May 01
laptop வர்க்கத்துக்கு மட்டும்
விடுமுறை போல..

வாழ்க Communism!

-


2 MAY AT 8:06

தம் பிழைகளை
மன்னித்துக்கொண்டுத்,
தம்மைத் தாமே
நேசிக்கத் தெரிந்தவர்கள் —

பிறர் குற்றங்களை
எந்த அளவுக்கு
மன்னிக்கிறோம்
எனும் கரிசனத்தில்,

இன்னும் கொஞ்சம் சிறந்து
இயங்கக்கூடும்
இந்த உலகம்.

-


30 APR AT 8:25

வீசும் காற்றால் மரம் அசைய
அசைந்த மரத்திலிருந்து
காற்று புறப்பட ஒன்றை ஒன்று
ஒருபோதும் மறுத்தது இல்லை!

காற்று, மரம் இவ்விரண்டுக்கும்
மனிதன் மெம்மெதுவாக
அந்நியப்பட்டுக் கொண்டிருப்பதை
நுரையீரல் உணர்ந்தது போல
வேறேதும் புரியவைக்க இயலாது.

-


Fetching Dhayaneswaran P Quotes