செய்யும் அக்கிரமங்கள்
வெளியே தெரியும் வரை
இங்கு ஒருவர் கூடச்
சீரழிவதில்லை.-
Writer
Translator
வேவு பார்க்கும் போலீஸ் பேய்களின்
கண்ணில் முள் குத்தி
மறைவாய்ப் புணர்ந்த
காமக் கடவுளர்
சாய்கின்றனர்;
•|| முகப்பில் விரியும் மைதானம் ||•-
நாளை
கூச்சமின்றி
நான் உண்ணப்போகும்
MUTTON பிரியாணிக்கு
ஜீவகாருண்யம் செய்கிறது
இன்றைய இரவின் கோடை மழையில்
"பாவம் பறவைகள் என்ன செய்யுமோ"
எனும் கவலை.-
"வானம் என்பது
பள்ளி மைதானம் போலவும்..
மேகம் என்பது
பஞ்சு மிட்டாய் போலவும்.."
இப்போதெல்லாம் வெறும்
கற்பனை விளையாட்டுகள்தான்..
நிஜம் கொடுமை செய்கிறது.-
நிராகரிப்பட்டும் நச்சரிக்காது
எட்ட நின்றபடியே அவளுக்கென்று
உன் நேசத்தை உயிரில் கருவைத்துச்
சாகும்மட்டில்..
பிரசவிக்காதிருத்தலே பேரழகு!-
மனை நிறைய செல்வம் கொண்டவன்
மன நிம்மதி தேடிப்போகிறான்..
மனம் நிறைய அன்பு கொண்டவன்
காதல் யாசகம் கேட்டுப்போகிறான்..
யாவும் இருந்தும் யார் இவர்கள்?
ஈகையின் இன்பம் அறியாதவர்கள்.-
பாத்திரம் துலக்குபவர்..
துப்புரவுப் பணியாளர்..
Security gaurds..
அனைவரும் நேற்று
உழைத்தனர்..
அம்மாவும் தான்..
நேற்று May 01
laptop வர்க்கத்துக்கு மட்டும்
விடுமுறை போல..
வாழ்க Communism!-
தம் பிழைகளை
மன்னித்துக்கொண்டுத்,
தம்மைத் தாமே
நேசிக்கத் தெரிந்தவர்கள் —
பிறர் குற்றங்களை
எந்த அளவுக்கு
மன்னிக்கிறோம்
எனும் கரிசனத்தில்,
இன்னும் கொஞ்சம் சிறந்து
இயங்கக்கூடும்
இந்த உலகம்.-
வீசும் காற்றால் மரம் அசைய
அசைந்த மரத்திலிருந்து
காற்று புறப்பட ஒன்றை ஒன்று
ஒருபோதும் மறுத்தது இல்லை!
காற்று, மரம் இவ்விரண்டுக்கும்
மனிதன் மெம்மெதுவாக
அந்நியப்பட்டுக் கொண்டிருப்பதை
நுரையீரல் உணர்ந்தது போல
வேறேதும் புரியவைக்க இயலாது.-