கைமாற்றுக்கு கண் சொட்டுந்நீரும்
கஞ்சப் புன்னகையும்!
அவ்வன்பிற்குத் தர வேறேதும்
என்பால் இல்லையடி தோழி.-
◾ENTP😎
◾Graphic designer🎨
◾Dreamer👼
◾Unofficial trial and error cook.🍛
◾Reg... read more
பல திங்கள் பறந்தனவே!
ஓர் இரவில் ஒரு சில வரிகள்
ஓட்டமிட்ட கண்கள்
மிளிர்ந்தன வெட்கப்புன்னகை.
அல்ல ,
அது விபரீதப் புன்னகை!
தெரிவை தொலையவில்லை!-
சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாண்டி
பிறர் நலன் கருத்தில் கொண்டு
ஆசைகளற்று போவதினால்
மணமானவளும்
துறவியாகிறாள்!-
அழகிய நிலவில்
ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு
வீடு செய்வேன்..
விண்மீன்கள் பறித்து
மழைநீரில் வேகவைத்து
என்னுயிருக்கு
உணவாய் பரிசளிப்பேன்..-
"மேகமஞ்சத்தில் தூங்கித்
துயிலெழுவோம் வானவீட்டில்!"
கனாக்களில் கதைச்சொல்லி
மடித்து வைத்திருக்கிறாள் மடலாய்..
பெறுநர் முகவரி
பெறுவது என்றோ?!-
வைத்த விழி இமைக்க மறந்து
விரித்த இதழ் சுருக்க மறந்து
அடி தூரத்திலிருந்து முறைக்கும்
தந்தை மறந்து
காண்கிறேன் தொடுதிரையில் உன்னை..
தேடுகிறேன் என் தொலைந்த மனதை..-
விடாது மழையிலும்
தன் மிதிவண்டியில்
எனை வீடு சேர்த்த ஒருவர்..
அத்தனை நூற்றிலும்
என் பிறந்தநாள் மறவாது
பரிசு தந்த ஒருவர்..
கட்டணம் தவிர்த்து
பயிற்சி கல்வி தந்த ஒருவர்...
விடுமுறையிலும் பள்ளிவந்து
பசிக்கும் செவிக்கும்
உணவளித்த ஒருவர்..!!
சம்பளம் தாண்டி
அக்கறை காட்டுவோரை
கண்டு உணர்ந்தேன்,
ஏன் தெய்வத்திற்கு முன்
குரு வந்ததென்று..!!-
சத்தியமா அவ சொன்னதெல்லாம்
நெஞ்சு பத்திரமாய் வைத்ததுதான்..
தீப்பிழம்பே கையில் ஏந்தியதுபோல்
மனம் தகித்துகிடப்ப தேனோ?
குளிரூட்டத்தான் அவன்
கதை சொன்னாலும்,
அது கதையென்றுதான்
அவள் அறிந்துகொண்டாளே..
தேவையே.. இது இல்லையே..
வெறும் தேடலின் பிழைதானே..-
அன்பைக் கூறும் முறையில்
புலமை வேண்டும்.. எனினும்,
அதை ஏற்கும் பக்கம்
புரிதல் இருப்பின்
அரைகுறை வார்த்தையே போதும்..!!-
கடுகு பொறிந்தாற்போல்
கால்கள் ஓடியது
அந்தக் குரல் கேட்டும்..!
இளைப்பாறி அமர்ந்த
இருக்கைப் பற்றி எரிந்தது,
வழியில் கண்ட சிறுவன்
"பசிக்குது கா" என்று
கூறியதுணர்ந்து..!
அன்றே முதல்முறை
அறைந்தேன் எனையே..
அறிந்தே செய்தேன் பாவம்
அவனை எங்கு தேடுவேன்?-