எத்தனை பல போராட்டங்களை கடந்த பாதை
பல போர்களை பழகிய பலவீனமான இதயம்
பணம் எனும் மாயையில் பல மோகம் கொண்டு
வாழ்க்கையின் அழகை ரசிக்க மறந்த அற்ப மனிதனாக இன்று இறுதி நாளில் என் விருப்பமாக புதியதோர் உலகத்தில் புதுமையென பிறவி எடுத்து வாழ்ந்து பார்க்க ஓர் ஏக்கம்....-
அவனின் கைபேசி சிணுங்கியது
ஆவலாய் எடுத்து பார்க்க
கடன் வாங்க அழைப்பு விடுத்தாள்
கன்னி ஒருத்தி கணினி குரலில்...-
சுஜாதா அவர்களுக்காக
லஞ்சம் கொடுப்பதற்காக 🤑
எதுக்கு 🤔🤔
சொர்க்கத்திற்குச் செல்ல 🦋
அறைக்கதவு கண்டிப்பாக
தட்டப்படும் ✌️-
அறைக்கதவு தட்டப்பட்டது.
"நம்ம எல்லார்க்கும் டஃபு கொடுத்து கடைசி ஆளா உக்காந்திருந்தா,நமக்கு மேல ஒரு கில்லாடி இருப்பான்போலயே" என எண்ணியவாறு கதவை திறந்தான்.
அங்கே வேற்றுகிரகவாசிகள் நின்றிருந்தது.அதன் உருவத்தை பார்த்த அவன் உறைந்துபோய் அதிர்ச்சியில் மாண்டேபோனான்....👽👽-
உலகம் இனி இயந்திர மனிதன்
கைகளில் என்றாகிப் போனது...
பஞ்சபூதங்களையும் பாழ்படுத்தி
உலக உயிரினங்களை எல்லாம்
அழித்தொழித்த பின் எஞ்சியவன்
அவன் ஆம் அவனுக்கு உணவோ
காற்றோ நீரோ தேவையில்லை
அணுமின் நிலையங்களே போதும்
இதுவரை இயற்கையை பாழாக்கி
உருவான மயான பூமியில் வாழ
தகுதியானவன்இயந்திரமனிதனே
-
தனிமையில் மிகவும் அரண்டு போயிருந்தான். அப்போது அறைக்கதவு
தட்டப்பட்டது. பயத்துடன் சென்று கதவை திறந்தான். அங்கே கண்கள் கூசும் அளவிற்கு மிகவும் பிரகாசமான ஒளியுடன் கடவுள் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை நோக்கி அழுதவண்ணம் கடவுளே தனிமை எனக்கு மிகவும் கொடுமையான ஒன்றாக இருக்கிறது. எனக்குத் துணையாக மற்றொருவரை படையுங்களேன் என்றான். அதற்கு சிரித்துக் கொண்டே கடவுள் கூறினார் ஒரு தடவை உங்கள் இனத்தை படைத்து நான் மாபெரும் பாதகம் செய்து விட்டேன். இந்த உலகத்தையே நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக நரகமாக்கி விட்டீர்கள். ஆதலால் மறுபடியும் உங்கள் இனத்தை படைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறி உங்கள் இனம் செய்த பாவத்திற்கான பலனை கடைசி மனிதனான நீ தான் அனுபவிக்க வேண்டும். நீ உன் ஆயுட்காலம் முழுவதும் தனிமையிலேயே கழித்து பைத்தியமாகி பின்னர் மரணத்தை எய்துவாய் என்று கூறி மறைந்து விட்டார். தன் விதியை நொந்தவாறு தனது மீதி காலத்தை கழிக்க ஆயத்தமானான் மனிதன்...-
அறைக்கதவு தட்டப்பட்டது.
திறந்தால், பூமி உள்ளே நுழைந்து
மனிதனைப் பார்த்துச் சொன்னது...
'கிளம்பு, கிளம்பு...
இனியாவது
மாசில்லா காற்று வீசும்,
அறிவியலில்லா அறிவு வளரும்,
இம்சை இல்லா இயற்கை செழிக்கும்,
உன் கால் தடம் இல்லா புற்கள் முளைக்கும்,
போரில்லா அமைதி இருக்கும்,
சுயநலமில்லா சுதந்திரம் மலரும்,
பேதமில்லா சமூகம் பிறக்கும்,
மிண்டும் ஐந்தறிவு உள்ள மிருகங்கள்
என்னை ஆளும்.'-
அறைக் கதவு தட்டப்பட்டது.
அப்போ இன்னொருவர் இருக்கிறார் என்று நினைத்து கதவைத் திறந்தான்.
சுஜாதாவே தான்.
"இந்த வரிக்கு பின்னால் நிறைய பேர் கதை எழுதுவாங்க.. அதை எல்லாம் படிச்சிட்டு சொர்கத்துக்கு போய் சேரு"
என்று சொல்லி அவரும் மறைந்து விட்டார். 😀-
பூமித்தாய் கண்ணீரோடு, அவள் பட்ட
வேதனைகளை திரையிட்டு காட்டினாள்.
கண்ணீரோடு, இவன் தற்கொலை
செய்ய ஆயத்தமானான்.
இதைத் தடுத்த அவள்,
அவனுக்கு ஒரு இணை படைத்து
புது உலகம் படைக்கச் செய்தாள்.
பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து
அவர்கள் பெயர் அறியப்பட்டது.
ஆதாம், ஏவாள் என.-