முடிந்து வைத்த மூர்க்க மூட்டை
அவிற்க்கப்பட்டது
முடியப்பட்ட தாலி கயிற்றில்-
உறங்கா இரவு
ஓரங்கட்டப்பட்ட ஓர் இதய வாசல்
துடைப்பம் தேடி அலையும் ஓசைகள்......
மூட மறுக்கும் இமைகளுக்கு
மூளை விடுக்கும் கண்ணீர் பரிசுகள்....
என
உரசப்பட்ட மனத்திரைகளில்
பற்றி எரிகிறது நினைவுப்பிழம்புகள்-
எதில் தொலைத்தேன் என்னை
எளிதில் உதறி சென்ற விழி ஓடைகளின் வரட்சி தன்னிலா?
கோபங்கள் லாவகமாய் மாற்றப்பட்ட இதழோர புன்னகை தன்னிலா?
தாபங்கள் தாங்கி தாங்கியே தகர்த்தப்பட்ட இதய துகள்கள் தன்னிலா?
இழப்பதற்கு ஏதுமில்லை என்ற எண்ணம் தன்னிலா?
இசைக்கும்
வழியறியா திசைக்கும் இடையில்
இடைப்பட்ட இந்நொடிகளில்
எதில் தொலைத்தேன் என்னை???
-
தாய்க்காக......
தேங்கிய நீரில் தென்றலின் வருடல்கள்
தேயிலை அரும்பின் வான் நோக்கிய காதல் பார்வைகள்
அட்டைகளின் அட்சயப்பாத்திரமாய் எம்மவர்களின் குருதி புணல்கள்
வியர்வை சுரப்பிகளை மிரட்டி ஆளும் பருவ நிலைகள்
அதிகார சுரண்டலின் அமிழ்ந்து போன கௌரவ கொள்கைகள்
கொட்டிக்கிடக்கும் மது விருந்தகங்கள்
இன்னல் தாழாது தற்கொலை செய்துக்கொள்ளும் அருவிகள்- என
நிராகரிக்கப்பட்டவள்
என் மலையகத்தாய்
-
நானும் பணக்காரிதான்......
விலைக்கழிவு கடைகளில்
விலையுயர் பொருட்களை தேடும் பொழுதும்
சம்பள வரவை வேண்டி நிற்கும்
நிலுவைக்கணக்குகளை சரிபார்க்கும் பொழுதும்
ஒற்றைத்தையலில் பாதம் காக்கிறேன் என
வலக்காலணியின் கர்வக்குரல் கேட்கும் பொழுதும்
முகப்பூச்சு கலன்களின் மௌனித்த மேனி கண்டு
உலர்ந்துவிட்ட சருமங்களின் நிந்தனைகளை நினைக்கும் பொழுதும்
முடிந்து வைத்த நாணயத்தாள்கள் ஒவ்வொன்றாய்
முடிவறுக்கும் பொழுதும்
வியந்து போகிறது மனம்!
ஊர் போற்றும் ஒற்றை வார்த்தையை எண்ணி!
ஆம்.....
"அவளும் பணக்காரிதான்...."
-
மனமுண்டாயின் இடமுண்டு
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஆம்.. இவைகளும்
அர்த்தமுள்ள வரிகளாம்
மணப்பெண் வியாபாரத்தில் மட்டும்
மங்கை அவள் தோற்றம் கண்டு விலை கோரும் ஈணர்களே!
நினைவில் நிறுத்துங்கள்
உடற்பிண்டம் சிதைந்து உயிர் பிரியும் நாள்
உயிர்ப்பற்ற உன் சதைபிண்டமும்
நின் நிலை கண்டு வெட்கப்படும்!-
அருவுருவம் தேடி உருவங்களின் ஓட்டம்....
பனி படர் தரையில்
பணி தொடர் நரையில்
குளிர் போக்க இறை அவன் வீற்றிருக்க
குறை காணும் இதயங்கள்
யாதுமானவனைக்காண
கோபுரத்தடியில் காத்தலும்
அவன் வகுக்கும் மாயை தானோ!
-
கானக மர அசைவில்
கனிந்த ஆசை திரலில்
உயிர் கொண்ட உடல் இளைக்க
இதழ் தன்னில் வெட்கம் மறைக்க
உன் விழிப்பார்வை எனை நோக்க
எதிர்ப்பார்வைக்கு திரானி அற்றவளால்
திக்கி தவிக்கிறேன் அன்பே!
உன்னைக் காணவே!!!
-
மழை மகள் சாரலில்
மணல் மகன் அகந்தை அடங்க
நிம்மதி கொள்கிறது
தெருக்கடை மிட்டாய் உறைகள்!-
நிறைமாத தாய் சிசு காண காத்திருக்க
கல்லறை வாசல் கதவுகள் திறக்க
சொர்க்கத்தில் சேரும் கருவறை காதலாய்
காதல் மழை பொழியத்தொடங்கும் முன்னே
காணலாய் மறைந்தாலும்
மானசீக காதல் தொடுதலால்
நெகிழ்கின்றன மன திரைகள்!-