அவரவர்
நடத்தையின்
மூலம்
வெளிப்படும்...-
காதலை எழுதியே
பழக்கப்பட்ட
விரல்கள்
இனிமேல்
கண்ணீரைத்
துடைக்கவும்
பழகிக் கொள்ளும்...-
எத்தனையோ
வலிகளும்
சோகங்களும்
தங்களை
திரையிட்டு
மறைத்துக்
கொள்கின்றன...-
உழைக்கும்
மக்களுக்கு
நேரமுமில்லை
காலமுமில்லை
எப்படியாவது
முன்னேறி
கரையேற வேண்டும்
என்ற எண்ணம் மட்டுமே...
-
விழிகள் மூடியபடி
இருந்தாலும்
எங்கோ தூரத்தில்
வரும் அவனது
வாகனத்தின்
சத்தத்தை
உள் வாங்கிய படி
அசைவற்று
நிற்பவளின்
மனம் மட்டும்
அவனை எதிர்பார்த்து
அவனின் அழைப்பிற்காக
ஏங்கிக் கொண்டு
காத்துக் கிடக்கிறது...-
என்ன மாதிரி
கதாபாத்திரத்தில்
வருவேன்
என்பதை
தீர்மானிக்கும்
இடத்தினில்
உன்னுடைய காதலும்
என்னுடைய
நம்பிக்கையுமே
இருக்கிறது...
-
ஏன் நமக்கு மட்டும்
இப்படியெல்லாம்
நடக்கிறது
என்ற கேள்வி
பலருக்கும்
மனதினில்
எழத்தான் செய்கிறது
இதையெல்லாம்
கடந்து வரும்
வித்தையை
கற்றுக் கொண்டால்
தான் வாழ்வில்
அடுத்த கட்டத்திற்கு
அடியெடுத்து
வைக்க முடியும்...
-
சேர்ந்து ரசித்தால்
சொர்க்கம் தான்
பரபரப்பான
நாளிலே
நிற்காமல்
ஓடிக் கொண்டிருக்க
ரசிப்பதற்கெல்லாம்
அதுவும் சேர்ந்து
ரசிப்பதற்கெல்லாம்
வாய்ப்பேயில்லை 🤔...-