கழுகுகளும்
பருந்துகளும்...
கறைகளையும்
கனல்களையும்...
கக்கிக் கொண்டிருக்க
தகிக்கும் தணல்களுக்கும்
சூறையாடப்படும்
சுதந்திரங்களுக்கும்
எதிராக ...
விடுதலை விரும்பி
ஆவேசம்
கொண்டெழுந்துபறக்கின்ற
அக்கினிக் குஞ்சு
நானாவேன்!!!!-
அடுத்தவரின் பார்வைக் கூட்டுக்குள்
அடைப்பட்டுக் கிடக்கும்
அத்தனைப்பேருக்கும்
விடுதலை என்பது இரக்கமற்றச்
சொல்லே!!!-
உன்
கருவறையில் இருந்து
நீ விடுதலை
கொடுத்ததும் தான்
உணர்ந்தேன்...!
நான்
சிறைப்பட்டது
உன்
கருவறை அல்ல
இச்சமூகமே....!
💞க.கொ.மணிவேல்...🖋️-
சர்க்கரை டப்பாவுக்குள்
சிக்கி திணறிக்
கொண்டிருந்தது
ஒரு சிலந்தி
பாவமாக இருந்தது
குழிக்கரண்டி உதவியுடன்
எடுத்து வெளியில்விட
படு வேகமாக
போயே போய்விட்டது
இப்போது
பொறாமையாக இருக்கிறது !— % &-
சுதந்திர வேட்கை..
இன்னமும் உள்ளது..!
விடுபட்டுப் போன..
விடுதலையின்,
நூலிழையில்..
சிக்கித் தவிக்கும்,
இந்த மாதருக்கு மட்டும்..!-
விடையில்லா உன்
விழி வினாக்களுக்கு
விடை தேட சொல்கிறாய்,
விடையளிக்க தவறிவிட்டால்
விடுதலை வேண்டாம்!
தண்டனை உன்
இதயச்சிறையில் என்றால்..,-
சில விடுதலைகள்கூட
தண்டனை தான்...
பறக்க மறந்த
பறவையை
கூண்டிலிருந்து
விடுவிப்பதைப் போல !-
விட்டு
விடுதலையாகிடச்
சொல்லி
நம்பிக்கை
தருவது
பெரும்பாலும்
விலங்கிட்ட
கைகளே !!-