तुम संग प्रीत लगाई....
-
एक हां कर दे बहुत कुछ नहीं चाहिए
बहुत कुछ भी नहीं, हां तेरीं ना नहीं चाहिए..-
அவனை பாராமல் ஏங்கி
அவள் கண்கள் சிவந்தது போதும்..
இனி அவனை நினைத்து
சிவக்கட்டும் அவள் கரங்கள்...
அவன் பெயர் கேட்டு மெல்ல
சிவக்கட்டும் அவள் கன்னங்கள்...-
ஒவ்வொரு முறையும்
வாசத்தை நுகரும்
போதும் எல்லாம்
கைகளில் வைத்த
மருதாணியிலும்
பூ பூக்கிறது-
வாங்கி வந்தேன் மருதாணி..
என் வீட்டு மகாராணிக்கு
கையில் இட்டு அழகு பார்த்தேன்..
தாமரை முகத்தோடு சிவந்தது அவள் கை மட்டுமல்ல... அவள் கண்களும் தான்...-
அம்மியில்
அரைக்கும் போதே
கைகளில் ஓட்டிவிட்டது
மருதாணியின் வெட்கம் !
-
அம்மா கையைப் பிடித்து நடக்க கற்றுத் தருகையில் கீழே விழுந்தும் சிவக்க வில்லை...
அப்பா மிதிவண்டி கற்றுக் கொடுக்கையிலும் சிவந்ததில்லை...
தங்கையிடம் அடித்து விளையாடுகையிலும் சிவந்ததில்லை...
பள்ளியில் ஆசிரியர் அடிக்கையிலும் சிவந்ததில்லை...
அலுவலகத்தில் பேனா பிடித்து எழுதுகையிலும் சிவந்ததில்லை...
அடுப்பு கரண்டி பிடிக்கையிலும் சிவந்ததில்லை...
ஆனால்...
உன்னோடு கைகோர்க்கும் நாளான இன்று மட்டும் நறுமணத்தோடு சிவந்தது இந்த நறுமணமும் சிவப்பும் என்றென்றும் என்னோடு நிலைத்திருக்க வேண்டும்...
-
மருதாணி
இடுகிறேன்
கைகளில்..
சிவப்பதோ
கண்கள்..
உன்னை
அணைத்துக்
கொள்ள
முடியாததை
எண்ணி !-