அம்மா கையைப் பிடித்து நடக்க கற்றுத் தருகையில் கீழே விழுந்தும் சிவக்க வில்லை... அப்பா மிதிவண்டி கற்றுக் கொடுக்கையிலும் சிவந்ததில்லை... தங்கையிடம் அடித்து விளையாடுகையிலும் சிவந்ததில்லை... பள்ளியில் ஆசிரியர் அடிக்கையிலும் சிவந்ததில்லை... அலுவலகத்தில் பேனா பிடித்து எழுதுகையிலும் சிவந்ததில்லை... அடுப்பு கரண்டி பிடிக்கையிலும் சிவந்ததில்லை... ஆனால்... உன்னோடு கைகோர்க்கும் நாளான இன்று மட்டும் நறுமணத்தோடு சிவந்தது இந்த நறுமணமும் சிவப்பும் என்றென்றும் என்னோடு நிலைத்திருக்க வேண்டும்...