பாசம் காட்டுபவர்களிடம்
வேஷம் போடக்கூடாது...
வேஷம் போடுபவர்களிடம்
பாசம் காட்டக்கூடாது...-
அன்று : மழையல தானமா
நனஞ்சிக்கோ...
சளி பிடிச்சா என்ன?
ஒரு டேப்லட் போட்டா போச்சு...
இன்று : லூசு உள்ள வா...
மழையல நனஞ்சி சளி பிடிச்சு
இருமினா பக்கத்து வீட்ல
உனக்கு கோரோனா
வந்துடுச்சினு ஆம்புலன்ஸ் கு
போன் பண்ணிருவாங்க...-
உன் வாய் பிளத்தலிலும்
பிதற்றுதல்களிலும்
வார்த்தைகளற்று
வாய் அடைத்து போய்
உன்னையே
சுற்றித் திரிகின்றன
என் கவிகள்-
மனையாள் ஊருக்கு சென்றதில்
மன்னவன் என்னை விட
மனைக் காப்பாளனுக்கே
மன வருத்தம் அதிகம்-
சிலருக்கு வீட்டில்
உள்ளவரோடு பேச
நேரமிருப்பது இல்லை
ஆனால் வெளியே
எங்காவது போனால்
பாசம் பொங்கிடும்
திட்டறது உள்பட-
உன் தாயவளின் கனவுகளை
நிதம் கண்ணில் காண்பவளே,
தாய்க்கே தாயனவள் நீதானே,
தன்னம்பிக்கையின் உச்சம் அது நீதானே,
தைரியத்தின் ஊற்று அதுவும் நீதானே,
'வெறும் பெண் நீ' என்றவர்கள் முன்,
நான் வெற்றி பெற வந்த பெண் என்றாய்;
உன் பிறந்த நாளில்
இந்த அத்தையின் ஆசிகளுடன்
வாழ வேண்டும் நீ பல்லாண்டு!❤️❤️-