என்னிடம் பொய் சொல்லி
என்னையே ஏமாற்றி
எனக்கான உரியவற்றை
எனக்கே தெரியாமல்
என்னிடமிருந்து அபகரிப்பவர்கள்
என்பது மறைவேதுமின்றி நன்றாகவே
எனக்குத் தெரிந்திருந்தும்
எள்ளளவும் தளர்வின்றி உதவுவது
எப்படியும் இறைவன் பார்த்துக் கொள்வான்
என்ற ஒற்றை எண்ணத்தில் தான்
-
நக்கிபிழைக்கும் சில
கூட்டங்கள்
கொண்டாடுகின்றன
விஞ்ஞானிகள்
தோற்றுவிட்டார்கள் என
முட்டாளே அவர்களோடு
நீயும் தோற்றிருக்கிறாய்
இனி அவர்கள் வெல்வார்கள்
உன்னால்...???-
கடமைக்கென ஒப்பேற்றிவிட்டு
கிளம்பி விடுகிறார்கள்
சுதந்திரமென்ற பெயரில்...
சரி தவறென்று சிந்திக்க
மறந்த சயநலவாதிகளாய் !
-
துரோகிகளை திட்டாதீர்கள்.... கட்டணமில்லாமல்
வாழ கற்றுத்தந்தவர்கள்
அவர்கள்....-
எதிரிகளுடன்
வாழ்வதைக்காட்டிலும்
இரட்டை
வேடமிடுபவர்களுடன்
வாழ்வது
மிகக்கடினம்!-
வீரர்கள் மனங்களில் வாழ்வதோடு நின்றுவிடுகிறார்கள்..! கோழைகள் சுவடுகளில் மட்டும் இருந்து விடுகிறார்கள்..! ஆனால் துரோகிகளோ மறுபடியும் பிறக்கிறார்கள்.. சில மனிதர்களாக..!
-
காந்தியை பின்பற்றுவது
நடைமுறைக்கு தொடர்பில்லா ஓன்று காரணம் அவர் போரிட்டது அந்நியருக்கு எதிராய்
இன்று நடக்கும் போர் ஒரே நாட்டில் உள்ள துரோகிகளோடு
-
ஏ ஆண்டவா!
ஆபத்திலி்ருந்து பாதுகாக்க
கண்களை கொடுத்தாய்!
அதை பின்புறம் பார்க்குமாறு
செய்யாமல் விட்டுவிட்டாயே
இங்கு எதிரிகளை விட
துரோகிகளே அதிகம்.-
அதிக அன்பும்,
அதிக நம்பிக்கை, ஒருவர் மீது வைக்காதீர்
ஏனெனில் அவர்கள் தான் நமது
அழுகைக்கு முதல் காரணமாக இருப்பார்கள்-