நடராஜர் சிலை வீட்டில் வைத்திருந்தால் வீடு ஆடி விடுமாம்,
கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பது போல் படம் வைத்திருந்தால் வீடு ஊதிவிடுமாம்,
அட பக்தி பதர்களே,
இதற்கு நாத்திகம் எவ்வளவோ தேவலை.
@i_am_sp-
வாழ்க்கை ஆரம்பமாகின்றது"
மலையேற்றங்களுக்கோ,
இல்லை நீண்ட தூர நடை பயணங்களுக்கோ,
வளையாத, உறுதியான மரத்தடிகளையே நாம் எடுத்துச் செல்வோம்.
வாழ்க்கை பயணமும் அது போல் தான்,
இறுதிவரை நம்பிக்கையோடு பயணிக்க, நம் மனமும் அதே உறுதியோடு இருக்க வேண்டும்.
@i_am_sp
-
போகும் பாதை தெரியும்
என்ன ஒன்று சென்றடையும் நேரம் தான் தெரியாது.
இடைப்பட்ட காலங்களில் நான் வருகிறேன் துணையாய் என எத்தனை பேர் வந்தாலும்,
பாதை முடியும் வரை நம்மோடு பயணிக்க முடியாது.
தொடங்கிய பாதை என்றோ ஒரு நாள் முடிய தான் செய்யும்.
இந்த இயல்பான எதார்த்தத்தை புரிந்து கொண்டாலே போதும்
யார் மீதும்,
எதற்கும் கவலை இல்லை.
@i_am_sp-
தேவையில்லை என்று வெட்டிய பிறகும்,
மீண்டும் அதே இடத்தில் துளிர்கின்றது
அந்த மரம்,
மன்னிக்கவும்!
அந்த மானம் கெட்ட மரம்.
@i_am_sp-
நாம் நாமாக இருப்பதற்கு
எந்த மெனக்கிடலும் தேவைபடுவதில்லை,
அடுத்தவர்களால் கவனிக்கப்படுவதற்காகவே
அத்தனையும்...!
@i_am_sp
-
உண்மைதான்
ஒரு நாளில் எதுவும் மாறப்போவதில்லை
ஆனாலும் முயற்சியுங்கள்,
.
.
ஒரு நாள் எல்லாம் மாறும்
@i_am_sp-
பழையவை கழிதலும்,
புதியவை புகுதலுமாய்
பலருக்கு போகி இருக்க,
கழித்த அந்த பழையதே
புதியதாய் சிலருக்கும்
இந்த போகி இருக்கத் தான் செய்கிறது.
@i_am_sp
-
அதிக நேரம் மெனக்கெட்டு
அழகாய் உடுத்திய
ஆடைகளுக்கு அர்த்தம் இருப்பதில்லை,
அவசர கதியில் கழற்றி எறியப்படும்
இராப்பொழுதுகளில்...!
@i_am_sp-
வசப்படும் தூரத்தில் தான்
வானம் உள்ளது..!
என்ன ஒன்று எனில்?
வசப்படும் என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கே
அது புலப்படுகிறது.
@i_am_sp-
சாலையோர மரங்களுக்கு
நம்மிடம் இருந்து
பெரிதாய் என்ன தேவை இருந்து விட போகின்றது?
நீரோ... உரமோ... கூட அல்ல..!
கிளைகளை கூட வெட்டிக்கொண்டேனும்
மிச்சமிருக்கும் நிழலில் இளைப்பாறியேனும்
என்னை அப்படியே விட்டுவிடுங்கள் என...!
@i_am_sp-