உனது கேள்வி
ஒருவரின்
தன்மானத்தைச்
சீண்டிப் பார்ப்பதாய்
இருக்குமாயின்,
கேட்பதற்கு முன்
பலமுறை யோசி.
அங்கே
அவமானப்படப் போவது
நீயாகவும் இருக்கலாம்.
அனைவருக்கும் முதுகுண்டு!
-ஜெயந்தி முருகன்.-
அன்பிற்காக
அடி பணியும்
மனமே...
தன்மானத்தை
தீண்டும்
போதாவது
தலை நிமிர்த்து
கொள்...!!!-
கடந்திட சொல்லும்
தன்மானமும்...
அசையாமல் நிற்கும்
அன்பும்...
இடையில் சிக்கி
சின்னாபின்னமாகிறது
மனம்...!-
விட்டுச் சென்ற
உறவுகள்..
மீண்டும் தட்டி
தழுவ தவிக்கிறது..
தன்மானத்தை சுமந்த
நானோ தவிர்க்கின்றேன்..
தெரிந்தே மீண்டும்
கலங்கத்தை சுமக்க
தெம்பற்று கிடக்கிறேன்..!!
- இளங்கவி ஷாலினி கணேசன்-
எல்லாருக்கும்
மானம் ரோஷம்
கொஞ்சம்
அதிகமாகவே
இருக்கிறது..
நான் தான்
அதையெல்லாம்
காற்றில் பறக்க விட்டு
அவர்கள் பின்னால்
ஓடிக்கொண்டிருக்கிறேன்-
சிலரின் காதல்
உயிர்த்திருப்பதே..
துணையின் தன்மான
தானத்தில் தான்..!
-
ஆழ்மன குரங்கனிடம்
உனக்காய் யாசிக்கிறேன்..
திமிர்கிறான் அவன்
தன்மான தமிழனனென..
இந்த கண்கள் மட்டுமென்ன
வேற்று மாநிலத்தவனோ???
-
யாரென்ன சொன்னாலும்,
தன்மானம் குன்றாது
தனிவழி நடப்பவன்
எவனோ,
"அவனே தலைவன். "-
வேறு போக்கிடமின்றி அல்ல
சூழ்நிலையை தக்கசமயம் கடக்க
அதிகாரத்துக்கு முன்
அடிப்பணிந்து தலைக்குனிகிறது
தன்மானம் !
-
தன்மானத்தை பெரிதும்
மதிப்பவனை...!
தன்னை மதி என
தலைகனம் கொள்கிறது...!
மதிப்பு மிக்க
மனிதன் மண்டியிடுகிறான்...!
மதிப்பற்ற பணத்திடம்...!
-க.கொ.மணிவேல்...🖋-