காதல் வசப்படாமல்.. அன்பு வலிமையோடு நம்மை ஆட்கொண்டு.. உரிமை மிக்க உறவாக உருவெடுத்து நிற்கிறதே ஓர் உணர்வு..! இதை தாண்டியும் ஓரிதம் தேவைதானோ இந்த இதய துடிப்பிற்கு..!! என் இனியனே..!!!
ஆளுயரத்தை அரையாக்கி தன் காலுயர மகனின் முகம் பார்க்க முட்டியிட்டு அரை மணி கூட ஆயுளிள்ளா அச்சட்டைக் கையின் மடிப்பை சிறு சுருக்கமின்றி அழகாக்கிட்ட ஓர் தந்தை!! ஆண்களை அளவிடும் என் பார்வையின் ஆகச் சிறந்த ரசனை இது...!!
"காதல் என்ற ஒன்றே இல்லை" என்பதில் குழம்பி... "உண்மை காதலை நான்தான் இதுவரை கொண்டதில்லை" என்பதில் தெளிகிறது.... ஏமாற்றத்திற்கும் ஏக்கத்திற்குமான இடைவெளி...!!