இது பார்த்ததும் தோன்றிய
காதல் அல்ல, இந்தப் பாரினில்
நாம் சேர்ந்து வாழ, அந்த பிரம்மனும்
விரும்பி எழுதிய காவியம்
♡♡♡♡♡-
என் காதோர அலைவரிசையை சரிசெய்யும் ஒப்பந்தம் காலவரையின்றி
கள்வன் அவன் கைகளில் கையெழுத்தானதோ!-
நின் காதலில் நிறைந்தே
நின் கவிகளில் வாழ்கிறேன்
நின் கண்களில் நிறைந்தே
நின் நிம்மதி காண்கிறேன்
நின் வலிகளில் கலந்தே
நின் வாழ்வாய் ஆகினேன்
நின் மகிழ்வினைக் காணவே
நின் மனம் நிறைந்திட ஆசைப்படுகிறேன்-
கணவன் மனைவிக்கு இன்பங்களை வழங்கினால் மனைவி அவளது அன்பை அவள் சமைக்கும் உணவிலும், பரிமாறும் விதத்திலும் அந்தி சாயும் வேளையில் கட்டிலில் காணலாம்.
-
கணவன்
இருக்கும்
போது ஒரு
விதமாகவும்...
இல்லாத
போது ஒரு
விதமாகவும்...
மனைவி
என்கிற
மருமகள்கள்
செய்வது
சரியென்றால்
இதுவும் சரியே...💕-
கணவனாய் சிலநேரங்களில்
கறாராய் தான் இருக்கிறாய்..
ஆனால்,
இடர் மிகு நேரங்களில்
தோழனாய்,
நின்று தோள் கொடுக்க
என்றுமே
நீ தவறியதில்லை..
-
தந்தை தோழனாகவும்,
தோழன் கணவனாகவும்,
கணவன் இரண்டுமாகவும்,
கிடைப்பது பெண்களுக்கு
ஓர் வரமே!-
அவனைக் கண்டதும்
நானும் கொஞ்சம் அசடு
வழிந்தபடியே நிற்கிறேன்,
இது வரை கண்டதில்லை
என் கள்(ண)வனான
அவனின் வெட்கம்
கொண்ட அந்த
அசட்டு சிரிப்பை!-