நிதமும் அனுதினமும் நித்தம் நித்தம் உள்ளுறையும் ஆன்மா மடிவதென்வது இப்பயணத்தில் வாடிக்கையாகிப் போன பின்னரும் கூட, எப்படியாவது மூச்சை பிடித்துக் கொண்டு முழித்துப் பார்க்கத்தான் வேண்டியுள்ளது.. கடந்து கொண்டிருப்பது பிறவி என்னும் பெருங்கடல் அல்லவா?
பெறுகின்ற அன்பெல்லாம் பொய்யென தெளிந்திடு! தருகின்ற அன்பெல்லாம் மெய்யென பேணிடு! மெழுகிட்ட பச்சையத்தின் மேல் நிற்கும் துளி நீர் போல், மெய்யான சிவம் கண்டு, பொய் விலக்கி வாழ்தலே உலகில் உயர்ந்த உன்மத்தம் 🙏