இந்நிலையும்
ஒரு நாள் மாறும்..!
— % &-
என் சுயத்தை பற்றி மறந்து
போனேன்...
உன் சுயரூபம் அறிந்து மிகவும்
வேதனை அடைகிறேன்...
எனக்கு நானே வேலியாக்கி
கொள்கிறேன்..
இனி என் வாழ்வில் "சொந்தம்"
என்ற பந்தத்தை அடியோடு
அறுத்து விடுகிறேன்...-
இதுதான் என்
காதலென்று
உன்னிடம்
சொல்லவில்லை
இதுவும் என்
காதலென்றுதான்
சொல்கிறேன்!-
இதுவும் நிகழ்வதற்கு முன்
பொதுவாய் ஒரு
உறுதி எடுப்போம்
ஆறு கொண்ட மணல்
காக்கவும்
மழை கொடை நீர்
சேகரிக்கவும்...-
In the battle between heart and brain, fate always wins!
The honest truth behind the screen is we set the path for the fate to win!!
The so called matured heart and brain!!-
தேர்வு முடிந்தால் அச்சம் வரும்
முடிவு தெரிந்ததும் அச்சம் கடந்து போகும்!
தவறிழைத்தால் பயம் வரும்
தண்டனை கிடைத்ததும் பயம் கடந்து போகும்!
துரோகம் தொடர்ந்தால் கோபம் வரும்..
மன்னிக்கப் பழகிவிட்டால் கோபம் கடந்து போகும்!
துன்பம் நெருங்கினால் அழுகை வரும்!
இன்பம் நெருங்கும் போது அழுகை கடந்து போகும்!
எது வந்தபோதும் ,
"அதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்"
-
என்னை விட வேறு யாரால்
உன்னை இத்தனை
அழகாய் ஆட்சி செய்ய முடியும்
நம் காதலெனும் இராஜ்ஜியத்தில் !-
வைகறையில் வந்தாள்
வசந்தத்தை வீசினாள் !
வலி கொண்ட தேகத்தை
மெலிதாக வருடினாள் !
கண் விழித்து காண்கையில்
காற்றினில் கரைந்தாள்
பூந்தென்றல் !
-
..........ஆறுதல்...........
நீங்காத நினைவுகள்!
நகராத நிமிடங்கள்!
நாட்குறிப்பை நிதமும் கிழித்துப்போட்டு உருவான காகித குவியல்கள்!
நிழல் போல் என்னை தொடரும் தனிமை!
என்று எவ்வளவு துன்பம் வந்தபோதும்,இதுவும் கடந்துப்போகும் என சொல்கிறது நெஞ்சம்.........-