முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட வாக்கியங்கள் யாவும், நமக்குள் எதையோ !
கற்றுக் கொடுத்தே நம்மைக் கடந்து செல்கின்றன.-
எதுவுமே தோன்றவில்லை எண்ணத்தில்....!
ஆயினும்,மனமோ
"எழுது " " எழுது" என்றேத் தூண்டுகிறது.
எதைப் பற்றியெழுதினால் என் மனம் முழுமையடையுமோ !-
ஒவ்வொரு அனுபவமும் நமக்கு
ஏதோ.....!
ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்தே செல்கின்றது.-
தினந்தோறும் என் உள்ளத்தெருவில் திருடன்
உன் கொள்ளைச் சம்பவத்தை தொய்வின்றி நடத்தி விடுகிறாய் !
அதற்குத்தண்டனையாக உனை ஆயுள் கைதியாக்கி என் மனச் சிறையில் பூட்டி வைக்க போகிறேன்.-
மிகவும் இறுக்கமான சூழலில்
என் மனம் தேடுவதென்னவோ....!
மணம் மிக்க இந்த தேனீரும்,
மண் வாசனையை சுவாசித்துச் செல்லும்
வெகு தூர சன்னலோர பயணங்களுமே !-
உச்சி முகர்ந்து உணர்ச்சியைத் தூண்டி
என் உதட்டோரம் இரைத் தேடும் கழுகு நீ.
உன் ஒற்றை விரலால் சொக்கி விண்
உச்சத்தினை அடைந்து தானே
உருகிப் போகும் மெழுகு நான்.-
என்
தூக்கத்தைத் தொலைத்த போதிலும்
பெண்
ஏக்கமெலாம் உன்னைச் சுற்றியே..!-
நான் சோர்வடையும் போதெல்லாம்
ஓர் தாய் மடி போல் தாலாட்டி
எனக்கு தன்னம்பிக்கைத் தருவது
கருத்தில்லா, கலையில்லா
எனது எழுத்துக்களே !-
பார்வையால் எனைப்
பருகியது போதும்...!
பசிக்கிறது நமக்குள்
பண்டமாற்றம் செய்வோமா !-
கள்வா..!
வைகறையே வந்து விட்டது.
உன் செய்முறைக்கு
சிறிது ஓய்வு கொடு.
தலைவா..!
இம்முறையில் வேண்டாமே.
இனி எண் முறையில் எனக்கு
கணக்கிட்டு இன்பம் கொடு.-