இருத்தலுக்கும் இல்லாமைக்கும்
இடையே இயங்கும்
ஈசலின் சாயலை
பூசிக்கொள்கிறது!
இந்த நாட்கள்...
-
சொந்த நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு,
வேறுநாட்டிற்கும் புலம்பெயர
வழியின்றி அகதியாய்
அழைந்தே மரித்துப் போகின்றன!
கோடைக்கால மேகங்கள்...-
தலைக்கோதிடும் காற்றிடம்
பார்க்கிறேன் தாய்முகம்!
தடம் போட்டிடும் நினைவைத்
தாண்டி போகிறேன் ஓர் இடம்!
பயணங்களின் கரம்பிடித்தே
பாரங்களை கடக்கிறேன்!
கானகம் மறக்கிறேன்!
காற்றிடம் கதைக்கிறேன்!
தொலைந்ததை மீட்கவே
தொலைவுகளில் தொலைகிறேன்....
-
What is the real essence of life?
That is like a gap between the words
In correct and incorrect.
small gaps will change everything...
Just wait:)
-
உன்னை நேசிப்பதே
என் தலையாய கடமையாக
நினைத்து வாழ்கிறேன்!
ஒருதலையாக இருந்தாலும்
ஒருபோதும் மறுதலிக்காது
என் நேசம்...-
பல்லியின் வாலாய்
வெட்டி விட்டாலும்
மீண்டும் வந்துவிடுவேன்
என்ற நம்பிக்கையில் தானோ,
சிலர் அவர் தப்பிக்க
என்னை கழற்றி
விடுகிறார்கள்?-
தீராத கதை ஒன்றை
தீயாக மனதை துளைத்து
உன் தீராத காதலினால்
எழுதிச் சென்றாய்,
அணு தினமும்
அதைப் படித்து
ஆற்றிக் கொள்கிறேன்!
என் ஆறாத காயங்களை....
-
உண்மைகள் ஒருபோதும்
ஊமைகளாவதில்லை!
சிலவேளைகளில்
அவை பிரசவித்து வெளிவர
நீண்ட காலம் தேவைப்படலாம்..
ஆனால் கண்டிப்பாக
ஒரு நாள் மண்ணில் ஜனித்து
மரித்து போகும்...-