மேல் வானமும்
செக்கச் சிவந்தன,
மாலை மயக்கத்தின்
அழைப்பாய் ஒப்பனை
சற்று கூட்டிய அரிதாரம்
அள்ளி பூசிய தாரமும்
கூடவும் என்னவளே
வரி உதடுகளையும்
வாரியணைக்கவே
வண்ணப் பூச்சுகள்
மெருக் கேற்றமும்
அழகுக்கு அழகு சேர்க்கும்
அரிவை பேதையவளே-
இங்கு ஆகாய' சக்தியை அனைத்தின் முதன்மை சக்தி, அதுவே அனைத்திற்குமான காலமும் கூட.. (முடுக்கம்),
எனவே
ஒர் உயிரின் காலமும், பரிமானமும்மே அதனின் தீர்மானம்மாகும்.
Here is the primary power of all, the time for everything. (acceleration),
And hence
The time of a life and a gift is its decision.-
செந்தூரம் பூசிக்கொண்டு!
தன்னை அலங்கரித்துக் கொண்டதோ அந்திவேளையில் !
வானில் நடக்கும்
இரவின் விழாவிற்கு
விருந்தாளிகளாக
நட்சதிரங்களையும்!
தலைமை ஏற்க
நிலவையும் அழைப்பதற்கு!!!
_ இரா. ஸ்ரீ தேவி-
தன் காதலை வெளிப்படுத்த
ஆகாயக் கூந்தலை
மெல்ல வருடிச்செல்கின்றன
கதிரவனின் கதிர்வீச்சு .....
-
நினைத்திருந்தேன்.
கதிர் நீ குளிர்ந்ததன்
தடமே
செம்மையென
அறிந்திருந்தேன்.
வெம்மை உன் வாழ்விடம்,
தீராத நீரூட்டி குளிர் வித்தாளோ
வானமாதேவி...........
-
அன்பின் ஊற்று
அடைபடாமல் இருந்தால்
அழகான இதயத்தின்
ஆயுளும்
ஆகாயமளவு
விரிவடைந்து
கொண்டே இருக்கும்...!!!-
வெட்கி சிவப்பதேன்...?
விடியலுக்கு முன்
இவளது நிலை கண்டு நாணியதோ
அதுவும் கூட...?!-
அப்படி நினைத்துவிட்டால் அகங்காரமெல்லாம்
ஆகாயத்தை அளக்கும்!
அதற்கு இடம் கொடுத்து
அடிபணிந்தா
கிடக்கப் போகிறாய்?
துணிந்து எழுந்தாலே
துன்பமெல்லாம்
பாதத்திற்கு கீழ்...!
புரிவாய் எனக் கருதி
மகிழ்வில் நான்...!!!-
அலைபேசி ஆள்கின்றபோதும்
அதை தவிர்த்து, ஆகாயம் வாய்பிளக்க
அப்படியொரு சிரிப்பு....ஆனந்தஉச்சியில்
யாருக்கு கிடைக்கும்...!!!-