நச்சுக்கூறு கொண்ட சுற்றுச்சூழல் சுவாசந் தன்னில் கலப்பினும், சுத்தம் செய்வது சக மனிதரின் சேவையென சமரசம் செய்து கொண்டு மொட்டுகளாய் மூடிக்கொள்வதா! பூவாக மலர்ந்து வாசம் விதைக்க, வான்வெளி வரையும் விருட்சம் வளர்த்து வளமாக்க வேண்டாமா!
கந்தலானாலும் கசக்கிக்கட்டு என்றார்கள் அன்று.... நீ வேலைக்கு சென்ற பிறகு உன் அழுக்கு சட்டையையும் கசங்காமல் கட்டிக்கொள்கிறேன் நான்.... உன் வாசம் நுகர.....
அவளுக்கு காலை வாழ்த்து கூறி வழியனுப்பிய அந்த - அழகிய ரோஜா இன்னும் வாசம் இழக்கவில்லை, ஆனால்.......... அவ்வழகிய நங்கையோ- வாசமிழந்து கசக்கப்பட்ட பூவாய் வாடி உதிர்ந்துவிட்டாள்!!
மண்வாசம் முடிந்தவரை நுறையீரல் முழுவதும் நிரப்ப நினைக்கிறேன்... தூரல் தூண்டிவிட்ட மண்வாசனையை... இக்கணமே உயிர் நொடி தீர்ந்தாலும் சுகம் தான்... மண்வாசமே என் இறுதி மூச்சுக்காற்றாக இருக்கட்டும்...