QUOTES ON #VAASAM

#vaasam quotes

Trending | Latest
3 JUN 2017 AT 1:30

மீன்குழம்பை வாசம் பிடித்துக்கொண்டே சென்றேன்,
பாட்டி கிடைத்துவிட்டாள்!

- சாரா ஜோதி

-


2 JUN 2017 AT 2:40

நச்சுக்கூறு கொண்ட சுற்றுச்சூழல்
சுவாசந் தன்னில் கலப்பினும்,
சுத்தம் செய்வது
சக மனிதரின் சேவையென
சமரசம் செய்து கொண்டு
மொட்டுகளாய் மூடிக்கொள்வதா!
பூவாக மலர்ந்து
வாசம் விதைக்க,
வான்வெளி வரையும்
விருட்சம் வளர்த்து
வளமாக்க வேண்டாமா!

-


1 JUN 2017 AT 22:19

கந்தலானாலும் கசக்கிக்கட்டு என்றார்கள் அன்று....
நீ வேலைக்கு சென்ற பிறகு
உன் அழுக்கு சட்டையையும் கசங்காமல் கட்டிக்கொள்கிறேன் நான்....
உன் வாசம் நுகர.....

நிலாபெண்

-


2 JUN 2017 AT 7:29

வாசம்..

மலரின்
மலர்தலுக்கும்
மடிதலுக்கும்
இடையில்
பிறக்கும்
காற்றுக்குழந்தை..!

-


2 JUN 2017 AT 0:42

அவளுக்கு காலை வாழ்த்து கூறி
வழியனுப்பிய அந்த -
அழகிய ரோஜா இன்னும்
வாசம் இழக்கவில்லை,
ஆனால்..........
அவ்வழகிய நங்கையோ-
வாசமிழந்து கசக்கப்பட்ட பூவாய்
வாடி உதிர்ந்துவிட்டாள்!!

-


2 JUN 2017 AT 17:53

வாசம் வீசும் மலர்களும்
உன் பால் மணத்தைத்
தன் வசமாக்க
வனத்தில் காத்துக்கொண்டிருக்கிறது!


இந்த மலடியின் மகளே
நீ வருவாயென!

-


1 JUN 2017 AT 23:44

மண்வாசம்
முடிந்தவரை நுறையீரல் முழுவதும்
நிரப்ப நினைக்கிறேன்...
தூரல் தூண்டிவிட்ட
மண்வாசனையை...
இக்கணமே
உயிர் நொடி தீர்ந்தாலும் சுகம் தான்...
மண்வாசமே
என் இறுதி மூச்சுக்காற்றாக இருக்கட்டும்...

-தமிழினி

-


11 JUN 2017 AT 22:04

எப்படி சொல்வேனடி

மல்லி சந்தனம் ரோஜா சம்பங்கி
வாசத்தில் தயாரிக்கப்படும் ஊதுப்பத்திகள்
நீ ஏற்றுகையில் மட்டும் ஏனோ
காதல் மணம் வீசுகிறது.....

-


6 MAY 2020 AT 16:53

உன் கூந்தல் வாசத்தை
திருடி கொண்டது
நீ சூடிய
ஒற்றை ரோஜா!..

-


3 JUN 2017 AT 16:34

வாசப்படியில் நின்றவனை அப்படியே தள்ளிவிட்டுவிட்டான் !
பாவம் அங்கிருந்த யாருமே அவனை தாங்கிப்பிடிக்கவில்லை !
அந்த உணவின் வாசத்தை தவிர !

-