மின்னலாய் என்னைத் தாக்கினாள் -அவளது குறும்புப் பார்வையால்!
மீசையை இருந்தயிடம் தெரியாமல் சவரம் செய்ய வைத்தாள் -அவளை
அள்ளியணைத்து முத்தமிடும் ஆசையால்!
மன்னனாகயிருத்த என்னை அவளது சேவகனாக மாற்றிவிட்டாள் -அந்த ஒரு சொல்லில்,
அப்பா என்னும் ஒரே சொல்லில்!
என் இளவரசியின் கோட்டையில்
நான் என்றுமே அவளது அன்பின் அடிமை!
-அப்பா
-