அன்புள்ள காதலியே உனக்காக ஒரு கவிதை...
கடக்க போகும் ஆயிரமாயிர வருடங்களுக்குமான முன்னோட்டமாக...
கண்பார்க்கும் முன் எனக்குள் நிறைந்தவள்,
பார்த்ததும் உனை தந்துவிட்டாய்...
உனக்கென நினைப்பதற்குள்,
எனக்கெனவே எல்லாம் முடிக்கிறாய்...
காதல் மோகம் காமமென காலசல்லடையில் எல்லாம் கரைந்தோடினாலும்...
சல்லடையில் நிற்கப்போவது நம் அன்பாகபோகட்டும்...
உன்னை உயிரென ஒருகுடும்பம்...
என்னை உயிரென ஒருகுடும்பம்...
அதிவிரைவில் ஒரே சங்கமமாய்...
பொய்க்கால் கட்டிக்கொண்டு என்னை நானே உயர்த்தி கொண்டேன்...
நாம் வாழும் உலகின்
பிரிதொரு பரிணாமத்தில் உனை தாங்கிப்போக...
நம் பெருவாழ்வின் காதல் முழுதும்...
உன் முதல் ஸ்பரிசத்தில் பருகிவிட்டேன்...
நிம்மதியோடு விடைபெருகிறேன்...
உன்னின் நீட்சி நானாகவும்...
என்னின் நீட்சி நீயாகவும்...
-