அது தன் எல்லைக்குள்
இருக்கும் வரையில்
யாருக்குமில்லை வம்பு
அனுபவத்தில்
சொல்கிறேன் நம்பு 🙏-
உயிரோடு இருக்கும் போது
சோறு போடாமல்
சாப்பிட்ட பிள்ளைகள்
பெற்றோர்கள் இறந்த பின்
அவர்களுக்காக படையல் போடுகிறார்கள்.
-
குட்டியாகி அவனை போல் ஒருவளோடு அவளும்
அவளை போல் ஒருவனோடு அவனும்
அன்புமொழி பகிர்ந்து அந்த
இருவரும் இந்த இருவருக்கும்
அனைத்தும் ஆகி அகம் முழுதும்
ஒப்பற்ற அற்புதத்தோடு பிள்ளைகளின்
பிள்ளைகள் பெற்றோர் பருவம் கடந்த தோழமை
அவர்களுக்குள் உறைநிலை
இல்லார் வாழ்வை நோக்கின் இங்கு
கிடைக்குமாம் எல்லையில்லா நேரம் கதைக்க
-
எல்லையில்லா அன்பு
ஈன்றளிக்கும் நிறைவு
இல்லமெலாம் உண்டு
குடும்பமதில் நன்று...
பிள்ளைகளின் குறும்புகளும்
பெற்றவர்களின் ஆலோசனையும்
நித்தம் விலக்கும் சண்டைகளும்
நிறைவாய் அமைந்திடும் அன்புச்சங்கிலிக்குள்..
-
கற்பு நெறி தவறாது,
நல்லொழுக்கமாக..
கண்ணியமாக,
இல்லறம் நடத்தும்..
பல கண்ணகிகள்!
இன்றும் வாழ்கின்றனர்!
நல்பெற்றோர்கள்..
புகட்டிய ஒழுக்கநெறியை,
மனதில் ஏற்றுக்கொண்டு!-
அவள் கண் அசைவு போதும்
அவனின் கை ஆட்டல் போதும்
அவளின் மனம் எனதுடன் பேசும்
அவன் நினைத்ததை புரிய இயலும்
அவர்கள் மௌனம் என் காரியம்
அவர்கள் யார்?
பெற்றோர்கள்-
தொல்லையில்லா பிள்ளை
என்றும் பிரிவில்லா உறவு
முதிர்வில் நோயில்லா உடல்
இவையே ஈடு இணை
இல்லா வாழ்க்கை-
எட்டிப்பிடிக்கும் வயதில்..
எட்டாக்கனி யாவது ஏனோ...
எழத் துடிக்கும் வயதில்..
பெண் குழந்தைகளுக்கு
பெண்களான பிறகு!!
-