அறத்தை விதைத்த ஒளவையில் தொடங்கி,
வாழ்வோடு கலந்த அசரீரி குரலாக
வள்ளுவனின் திருக்குறள் தாண்டி,
கடக்க விடாமல் கார்ல் மார்க்ஸ்,
அவருக்கு பின்னும் பல சேகுவேராக்கள்,
பல வண்ணங்களில் பொன்னியின் செல்வன்,
வீரயுக நாயகன் வேள்பாரி,உடையார்
அங்கங்கு இளைப்பாற துப்பறியும் சாம்புவுடன்
காமிக்குகள் கலர் புத்தகங்கள் என,
வார் அண்ட் பீசில் இருந்து கள்ளிக்காட்டு இதிகாசம் வரை
நீளும் நடை பயணத்தில் சுவாசித்து விட்டு வரலாம்,
ஜெயகாந்தன்,ஜெயமோகன், சேட்டன் பகத்,நா.மு, நாஞ்சில் நாடன்,
ரமணிசந்திரன், புதுமைப்பித்தன், அம்பை,எஸ்.ரா
பெர்னாட்ஷா,இறையன்பு இன்னும் விட்டுப் போன
பல இலட்சம் படைப்பாளிகளின்
மூச்சுக்காற்றையும் சேர்த்து.
அங்கங்கு பறக்கவும் செய்யலாம்
கலாமின் அக்னி சிறகுகளோடும்,
பாட்டன் பாரதியின் வரிகளோடும்,
ஆயிரம் மார்வல், டீசி வந்தாலும்
இது அழகான வேற ஒரு உலகம்ங்க.
முடிஞ்சா ஒருமுறை வந்து பாருங்க
நம்ம ஊரு திருவிழா - பகுத்தறிவுத் திருவிழா - ஈரோடு
-