மகி...-
உனக்கும் எனக்குமான
போட்டியில் எப்போதும்
வெற்றி எனதே...
என் ஒவ்வொரு வெற்றிக்கு
பின்னாலும் உன் தோல்வி
உள்ளது...
அது என் வெற்றிக்காகவே
அடைந்த தோல்வி எனும் போது...
நான் அடைந்த வெற்றிகள்
எல்லாம் தோற்றே தற்கொலை
செய்கிறது...!-
விட்டுக்கொடுத்து கொண்டே
இருப்பவர்க்கு தனக்கு என்ன வேண்டும் என்பதை சொல்ல தெரியாது-
விட்டு கொடுங்கள்
தவறில்லை
அதில் உங்களை
விட்டு விடாதீர்கள்
தேடுவது
கடினம்......-
கோபம் என்பது கிழிசல் கரைசல் தானே!
கிளிஞ்சல்களால் ஆன,
ஆழிப்பேரலை ஒன்று அடி மனதில் அடித்தது-
பிடிவாதம் அறியாதவன் வெளிப்படுத்திய முதல் கோபத்தால்...
👇👇-
யாரோ நம்மை தெரியாமல்
விட்டுக்கொடுத்துவிட்டு
விட்டு செல்வதில் ஏனோ
பெரிதாக வலி தெரியவில்லை
தெரிந்தே நாம் விடைப்பெற்று
செல்வதின் வலியின்
ஆழத்தை உணரயிலே...!!!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
பின்வாங்குதல்
தவறில்லை...
எதிரே இருக்கும்
சூழ்நிலை யாவும்
கண்ணுக்கு சற்று
தெளிவாய் புலப்படும்
வரையில்...!-
கடற்கரையோரம் கால் ஊன்றி இறுக்கமாய் நின்றும்
கால் அடியில் உள்ள மணலை சூரையாடும்
கடல் அலை போல
இறுக்கமான மனம் கொண்டவர்களையும்
தன் அன்பால் ஈர்க்கும்
இனிமையான இதயமுள்ளவள் அவள்...-
அன்பிற்காய்
இழந்த கனவில்
ஒருதுளி பயனின்றி
போயினும் கூட
அதற்கு உரியவர்களே
துச்சமாய் சொல்லும்
பொழுதில்தான் உரைக்கிறது
எதற்காக விட்டுக்கொடுத்து
வலியை பற்றிக் கொண்டோமென...
-