துஞ்சிடா இமைகள்
துயில மறுத்து
துன்பப்படுத்துகிறது..
துவண்ட மனமோ
துளங்குகிறது
துகிலுரிக்க வேண்டிய
துச்சாதனனை எண்ணி..!!-
இராமனுக்கே தவமிருந்தாள்!
இராவணன் வந்து முன்நிற்கிறான்!
சீதையை சிறையெடுக்க!-
அண்ணன் இல்லாத பெண்கள்
காந்தாரிக்கான சகுனி மேலும்
சூர்ப்பனகைக்கான ராவணன் மேலும்
கொண்ட ஏக்கப் பார்வையை யாரறிவார்....
-
இமயம் தாண்டிய
இலக்கினை நிர்ணய
இலச்சினை கொண்டான்
இலங்கேஸ்வரன் இராவணன்
இயம்பியே ராவணக் காவியமாய்
இணக்கமான புலவனாய் குழந்தை
இளைய சகோதரன் இராமநாதனின்
இனிய அகவை திரு-நாளே இன்றும்-
இராமனுக்கே காத்திருந்தேன்!
இராவணன் தனி ஒருவனாக
சிறை பிடித்து கவர நினைத்தான்!
நான் என்கிற அகந்தையை கொண்டு!
அன்பால் எனை கவர்ந்தவர் இராமன்!
நம்பிக்கையில் காத்திருக்கிறேன்!
வீரனாக வந்து எனை மீட்பார் இராமன்!-
நெருப்பையும் சந்தேகிக்கும் ராமாயணம் அல்ல இது, அழுக்கையும் அலங்கரிக்கும் ராவணாயணம் இது!!!
அசுரன் - வாசிப்பு நிறைவடைந்தது
(மேலும் கீழே)-
ஒற்றை முகம் மறைக்கவே
பல முகமூடிகள் தேவை நமக்கு
ராவணன் என் செய்திருப்பான்?-
தாயக மண்ணில் மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்கள்
தாய் மண்ணின் மாந்தர்கள்
விடுதலையை விதைக்க விதையாய்
விதைத்த விதைகள்
தியாகத்தின் சின்னங்கள்
வீரத்தின் விளை நிலங்கள்
குலத்தின் குலதெய்வங்கள்
எங்கள் மாவீரர்கள் 🙏
-