ஆழ்ந்த
உறக்கத்தில்
அனிச்சையாய்
திறந்து மூடும்
உன் விரல்களுக்கு
இடையே
சிக்கிக்கொண்ட
காற்றுக்குத்தான்
எத்தனை கர்வம் !!-
தன்னைத்
தொட்டுப் பார்க்கும்
அவன் ஆசையை
கனத்த இதயத்தோடு
நிராகரித்தது
பட்டாம்பூச்சி..
எங்கே அவன்
விரல்கள் நோகுமோ
என்று !!-
பூக்களை போல
வார்த்தைகளை
தேர்ந்தெடுத்தேன்
விளைவோ
மென்மை போல
இல்லாது
குத்துவதில்
ஆர்வம் மட்டும்
காட்டுவது ஏனோ
வாழ்வே-
மென்இதழ் கொண்டு
சிறு அசைவினை
இசைக்கும்
பிஞ்சுகளை
காண
மெனக்கெடுகிறோம்..!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
அனிச்ச மலரை போல...
நான் மென்மையானவள் அல்ல🙃...
கொஞ்சம் வன்மையானவள் தான்...
எவ்வளவு நொறுக்கினாலும்💔...
தளிர் விட்டு கொண்டே தான் இருப்பேன்❤️...!
-
மென்மை
அவளது
சுபாவம்.
மேன்மை
அவளது
மனோபாவம்.
காதல்
ஒன்று
காதலைச்
சொல்ல
வரும்
பேரழகு!-
ஆண் அன்பால் ஆதிக்கம் செலுத்தவே
பெண்ணவள் படைக்கப்பட்டாள் !
அந்த அன்பை ஆட்சி
செய்வாளும் அவளே😉!
உடலில் மென்மையும்,
உள்ளத்தில் வன்மையும் வலிமையும்
வைத்து இறைவன்
படைத்தான் அவளை !
உடலில் வன்மையும் வலிமையும்
உள்ளத்திலே மென்மையும்
வைத்திறைவன் படைத்தான் அவனை !
உண்மையிலேயே, ஆண்கள்
பாவம் தானோ ??!!😕-
எவ்வளவு வலிமையான
மனதையும் எளிதாக
திறக்கும் சாவி...
ஒரு மென்மையான
புன்னகை மட்டுமே...!-