உங்களுடைய கண்களுக்கு
ஒருவர் தவறாக தெரிகிறார்கள் எனில்,
அந்த மதிப்பீடு
உண்மையாகவே
இருக்கும் என்றில்லை.
ஒவ்வொருவர்
ஒவ்வொரு விஷயத்தை
ஒவ்வொரு மனிதரையும்
பார்க்கும் விதம் வேறானது,
எண்ணும் கோணம் வேறானது.
நீங்கள் என்ன ஒருவரிடம் கண்டீர்களோ,
நீங்கள் என்ன ஒருவரிடம் பார்த்தீர்களோ
அந்நாளில்,
அந்த நேரத்தில்,
அந்த நொடியில்....
அதை மட்டுமே வைத்து
பொதுவாக யாரையும் மதிப்பிடாதீர்கள்.
முக்கியமாக தவறாக மதிப்பிடாதீர்கள்.
ஏனெனில் அவர்களுடைய சூழ்நிலைக்கு,
அவர்களுடைய நியாயத்திற்கு
அவர்கள் செய்வது,
அவர்கள் செய்தது,
சரியாகவே இருக்கலாம்.
-