கை பிடித்து எழுத வைத்தனர்
தாயும் தந்தையும்!
அவர்களைப் பற்றி ஆயிரம்
கவிதை எழுதினாலும்
நிகராகாது!-
யாரையாவது மகிழ்ச்சியாக..
வைக்க வேண்டுமென்றால்..
அதை முதலில்..
உங்கள் தாய், தந்தையரிடமிருந்து..
தொடங்குங்கள்...
-
பார்த்து பார்த்து சோறுட்டிய தாயை விட்டு உண்டு நிறையும் வயிறும்,
துன்பமறியாமல் அணைத்து
தோளில் தூக்கி வளர்த்த தந்தையை
தேள் கொட்ட கடிந்து பேசும் நாவும்,
தாயின் முகம் வாட்டம் கொள்கையில்
உணர்வோடு நோக்கா கண்களும்,
பெற்றவர்களை அனாதையாக்கி
நித்திரை காணும் இருதயமும்,
இரத்த ஓட்டம் உள்ள குப்பைகளாகும் !-
மன்னர்களின்
இரும்பு
கவசம் தரும்
பாதுகாப்பையும்
மீறிய ஒரு கவசமது
தாயின் பனிக்குடம்
நம்பிக்கை பாதுகாப்பின்
உச்சமது...
உலகை கண்டிட
உயரிய இடங்கள்
பலவாயுனும்
சிறந்தது அது என்
தந்தை தோள் ஏறி
நான் கண்ட உலகமே...-
நான்
வாடி
நிற்கும் போது..
தேடி
வரும் செல்வங்கள்
என் தாயும் தந்தையுமே...!!
-
அன்னையிடம் சண்டையிட்டு
அடி விழும் என அறிந்த
மாயத்தில் ஒடி சென்று
தந்தையிடம் ஒட்டிக் கொண்டு
மீண்டும் துணிச்சல் கொண்டு
தந்தையையும் தூண்டிவிட
வாதாடும் போது மனதில்
ஏனோ அத்தனை ஆனந்தம்..😍-
நம் பசி அறிந்தே பசியாற்றுபவர்
அம்மா தன் பசி மறந்தே பசி போக்குபவர் அப்பா இரு தெய்வங்களையும் என்றும் போற்றி
வணங்க வேண்டும்...!!!-
சிறு பிள்ளையில் கட்டளையிட்டு
பழகிய நான் இன்றும்
கட்டளையிடுகிறேன்
என் கட்டளைப்படியே
நீ அனைத்தையும் செய்வதால்
இன்று எதன் மேலும்
ஆசையில்லை தந்தையே..😍
உன் அன்பை கண்டு பலர்
வியந்தது உண்டு தாய்க்கோ
பொறாமை உனக்கு ஈடாக
அன்பு செய்ய எண்ணி
எண்ணி தினம்
தோற்கிறாள் அவள்
இல்லையேல் நாம்
நடைபிணம் என்பதையும்
மறந்து விட்டாள்..❤
-
எந்த தந்தையையும்
பார்த்து எந்த மகனும்
கேட்பதில்லை
மகளுக்கு மட்டும் ஏன்
இவ்வளவு கரிசனம் என்று
ஆயினும் மகள்கள்
தாயிடம் கேட்பது
ஏன் அவனுக்கு மட்டும்
இந்த கரிசனம் என்று
தந்தையை புரிந்து வைத்துக்
கொண்ட மகனின்
பக்குவப்பட்ட அளவுக்கு
எந்த மகளும்
தாயை புரிந்து கொள்வதில்லை-
தாயே தயாளகுணங்கொண்ட சதா சக்தியே சர்வமும் என்னுல் சிருஷ்டித்த தன்னியமானவளே தந்தையே எனை உலகிற்கு தந்தவரே எனது அனுபவத்தின் தன்னாதிகாரியே போற்றித்துதித்த காலம் எங்கோ தூற்றித் துறந்த காலமும் உண்டே காலம் செய்தது இனியொரு காலம் செய்வேன் காலமும் தம்புகழ் நிலைக்க முயல்வேன்...
-